Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
[03 - April - 2008] [Font Size - A - A - A]
வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தையடுத்தே இவர்கள் விடுதலையாகியுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்ட ஆறுபேர் இந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடத்தல்கள், கொள்ளைகளை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட நீதிமன்றில் நடைபெற்ற சந்திப்பையடுத்தே, ஓரிரு தினங்களில் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை செட்டிகுளம் பொலிஸாரால் மாவட்ட நீதிமன்றிற்கு கூட்டி வரப்பட்டனர். எனினும், தாங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

இவ்வேளையில் அவர்களை நோக்கி, சுதந்திரமான வாக்கு மூலத்தை நீதிபதியிடம் வழங்க விரும்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் வழங்க நீதிபதியால் கட்டாயப்படுத்த முடியாதெனவும் கூறினார்.

அச்சம் காரணமாக தாங்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாரிக்குட்டியூரில் இருவர் கடத்தப்பட்டனர். இதையடுத்து அப்பகுதி படைமுகாம் கட்டளை அதிகாரியை மன்றுக்கு அழைத்த நீதிபதி அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.

இதையடுத்து கடத்தப்பட்டவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். மற்றையவர், இராணுவச் சீருடையில் பவள் கவச வாகனத்தில் வந்தோரால் பிற்பகல் ஒரு மணியளவில் கூட்டிச் செல்லப்பட்டதாக, இராணுவக் கட்டளை அதிகாரி முன்பாக மனைவி சாட்சியமளித்ததுடன், இராணுவ அதிகாரி முன்பாக சாட்சியமளித்ததால் உயிராபத்து ஏற்படலாமெனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் எந்தத் தமிழ் ஆயுதக் குழுவிடமும் பவள் கவச வாகனமில்லையென்பதால், இந்தக் குற்றச்சாட்டை கவனத்திலெடுத்து கடத்தப்பட்டவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வாரிக்குட்டியூர் இராணுவமுகாம் கட்டளை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேநேரம், வவுனியா நகர மையப் பகுதியில் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றிற்கு அழைத்து வந்ததுடன், நீதிபதியின் உத்தரவின் பேரில் அனைவரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நீதிமன்றின் கடும் அழுத்தத்தால் இத்தகைய கடத்தல் சம்பவங்கள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்தபோதும், கடத்தப்படும்போது அழுது குழறும் உறவினர்கள், விடுவிக்கப்படும் போது பொலிஸாருக்கோ நீதிமன்றுக்கோ தெரியப்படுத்தாதது கவலை தரும் செயலென நீதிபதி கவலை தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
தாயகத்தில் தமிழர்களை குழிதோண்டி புதைக்க அரசு வைத்திருக்கும் பயங்கரப் பொறியே கிழக்குத் தேர்தல்
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி ஒருபோதும் உறுதியளிக்கவில்லை
வில்பத்துக்குள் இருவர் சுட்டுக்கொலை
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
மு.கா.ஒத்துழைப்புடன் ஐ.தே.க. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும்
சாதாரணதரப் பரீட்சை; வட, கிழக்கு மாணவர்கள் பெரும் சாதனை
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
மடுப் பகுதியை சமாதான வலயமாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் அமைதிப் பேரணி
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
மழையினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும்
டாக்டர் முத்துலிங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா சந்திப்பு
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருடன் ரோகித்த போகொல்லாகம சந்திப்பு
நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
வன்னியில் இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள்
உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்
பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
விசுவமடுப்பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
மல்வத்தயில் பஸ்- வான் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மூவின மக்களும் அச்சுறுத்தப்படும் நிலை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் 120 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மின்னல் தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் மரணம்
தாழ்வுபாட்டை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளைவானில் அழைத்து செல்லப்பட்டார்
ஹெப்பிட்டிக்கொலாவவின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையிலிருந்து பொருட்கள் கடத்திய 5 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்
பிரதி பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் மனு
அநுராதபுர நீரோடையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு
கொடக்கவெல வாகன விபத்தில் ஒருவர் பலி
இடி மின்னல் தாக்கி இருவர் பலி
2 1/2 மாதத்தில் 6 டெங்கு நோயாளர் மரணம் 2096 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
`பொசன்' பண்டிகைக்காக கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் 28 பாடசாலைகள் மூடப்படுகின்றன
இடிமின்னல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி வீதி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
எட்டு மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு
17 பேரையும் அக்ஷன்பாம் நிறுவனம் காப்பாற்றத் தவறியமை முதல்பிழை
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை மீறப்பட்டமையின் விளைவே யுத்தம்
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மாவட்ட தொண்டராசிரியர் நியமனத்தில் குழறுபடியென பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்கள் திருகோணமலையில் மீளக் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com