Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
[03 - April - 2008] [Font Size - A - A - A]
வடக்கே விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் இலங்கைப் படையினர், பாகிஸ்தானிடமிருந்து அவசர இராணுவ உதவியை கோரியுள்ளனர்.

60 மில்லிமீற்றர் மோட்டாருக்குரிய ஒன்றரை இலட்சம் குண்டுகளையும் பெருந்தொகை கைக்குண்டுகளையும் உடனடியாக வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது.

அத்துடன், 25 மில்லியன் டொலர் பெறுமதியான 81 மி.மீ, 120 மி.மீ, 130 மி.மீ மோட்டார் குண்டுகளையும் அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்குமாறும் இலங்கை இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ரப் பர்வேஷ் கயானியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதையடுத்து, தனது பல்வேறு ஆயுதக் களஞ்சியங்களிலிருந்தும் இந்த ஆயுத உதவியை இலங்கைப் படையினருக்கு உடனடியாக வழங்க பாகிஸ்தான் இராணுவம் சம்மதித்துள்ளது.

இலங்கையின் வடக்கே பலமுனைகளிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை தொடுத்து வரும் இராணுவத்தினர், அண்மைக் காலமாக விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர்.

வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடாவில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், அனைத்து முனைகளிலும் படையினர் மாதக் கணக்கில் இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

இதனால், களமுனையில் இலங்கைப் படையினர் வெடிபொருட்களை பெருமளவில் செலவிட்ட நிலையில், தற்போது அதனை ஈடுசெய்வதற்காக பாகிஸ்தான் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.

இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்து 1999 முதல் மிகப் பெருமளவில் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கொள்வனவு செய்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை இலங்கைப் படையினர் 500 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொள்வனவு செய்துள்ளனர்.

இதேநேரம், கவசப்படையணிகளுக்காக இந்த ஆயுதக் கொள்வனவு சடுதியாக மிகப் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இலங்கைப் படையினருக்கு மோட்டார் குண்டுகள், வானொலிக் கருவிகள், கைக்குண்டுகள், கடற்படைக்கான வெடிபொருட்கள் மற்றும் டாங்கிகள் உட்பட பிரதான ஆயுத விநியோகஸ்தராக பாகிஸ்தானே உள்ளது.

Email this page Your Opinion Print this page
தாயகத்தில் தமிழர்களை குழிதோண்டி புதைக்க அரசு வைத்திருக்கும் பயங்கரப் பொறியே கிழக்குத் தேர்தல்
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி ஒருபோதும் உறுதியளிக்கவில்லை
வில்பத்துக்குள் இருவர் சுட்டுக்கொலை
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
மு.கா.ஒத்துழைப்புடன் ஐ.தே.க. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும்
சாதாரணதரப் பரீட்சை; வட, கிழக்கு மாணவர்கள் பெரும் சாதனை
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
மடுப் பகுதியை சமாதான வலயமாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் அமைதிப் பேரணி
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
மழையினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும்
டாக்டர் முத்துலிங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா சந்திப்பு
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருடன் ரோகித்த போகொல்லாகம சந்திப்பு
நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
வன்னியில் இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள்
உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்
பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
விசுவமடுப்பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
மல்வத்தயில் பஸ்- வான் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மூவின மக்களும் அச்சுறுத்தப்படும் நிலை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் 120 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மின்னல் தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் மரணம்
தாழ்வுபாட்டை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளைவானில் அழைத்து செல்லப்பட்டார்
ஹெப்பிட்டிக்கொலாவவின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையிலிருந்து பொருட்கள் கடத்திய 5 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்
பிரதி பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் மனு
அநுராதபுர நீரோடையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு
கொடக்கவெல வாகன விபத்தில் ஒருவர் பலி
இடி மின்னல் தாக்கி இருவர் பலி
2 1/2 மாதத்தில் 6 டெங்கு நோயாளர் மரணம் 2096 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
`பொசன்' பண்டிகைக்காக கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் 28 பாடசாலைகள் மூடப்படுகின்றன
இடிமின்னல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி வீதி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
எட்டு மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு
17 பேரையும் அக்ஷன்பாம் நிறுவனம் காப்பாற்றத் தவறியமை முதல்பிழை
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை மீறப்பட்டமையின் விளைவே யுத்தம்
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மாவட்ட தொண்டராசிரியர் நியமனத்தில் குழறுபடியென பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்கள் திருகோணமலையில் மீளக் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com