Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
[03 - April - 2008] [Font Size - A - A - A]
* அஷ்ரப்பின் அடக்கத்தலமருகே ஹக்கீம்

எம்.ஏ.எம்.நிலாம்

கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டவே பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு மாகாண சபைத் தேர்தல்களத்தில் குதித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்ற பதவிகளை இராஜிநாமாச் செய்த பின்னர் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் ஹஸன்அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கொழும்பு ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சென்று மர்ஹும் அஷ்ரபின் அடக்கத்தலத்தில் துஆப் பிரார்த்தனையிலீடுபட்ட பின்னர் அங்கு கூடியிருந்த பெருந்தொகையான கட்சி ஆதரவாளர்கள் , தொண்டர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்மூலம் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு அரசு முனைகிறது. கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் வாக்குகளை கொள்ளையிடும் முயற்சியைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டக் களத்தில் இன்று நாம் குதித்துள்ளோம்.

ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யும் இந்தப் போராட்டத்தில் கிழக்கில் வாழும் மூவின மக்களும் எம்மோடு ஒன்று திரளத்தயாராகவிருக்கின்றனர் என்ற உத்தரவாதத்தை இந்த இடத்தில் உறுதிப்படுத்திக் கூறி வைக்கின்றேன்.

கிழக்கில் வாழும் மூவின மக்களும் சமாதானமாக வாழும் நிலையை உருவாக்கி அந்த மண்ணை சமாதான பூமியாக மலரச் செய்வதே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலட்சியக் கனவாகும்.

இந்த தேர்தலில் தாம் வெற்றியடைவோம் என்பதற்கப்பால் அரசாங்கத்தின் அராஜகத்தை முறியடித்து அங்கு ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதே எமது ஒரே குறிக்கோளாகும். கிழக்கு மக்கள் எமது பக்கம் இருக்கின்றார்கள் என்பதை இத் தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்டுவோம்.

ஹிஸ்புல்லா போன்றோரின் பச்சோந்தித்தனமான பசப்பு வார்த்தைகளை நம்புவதற்கு கிழக்கு முஸ்லிம்கள் இனியும் தயாராக இல்லை. நாம் யாருடைய பதவிகளையும் தட்டிப்பறிக்க மாட்டோம். ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து பறிபோகும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எவரும் வெளியேறுவதால் கட்சி பாதிக்கப்படப் போவதில்லை . கட்சிக்குத் துரோகமிழைத்தவர்களை மக்கள் உரிய நேரத்தில் கவனித்துக் கொள்வார்கள் என்றும் ரவூப் ஹக்கீம் தமதுரையில் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
தாயகத்தில் தமிழர்களை குழிதோண்டி புதைக்க அரசு வைத்திருக்கும் பயங்கரப் பொறியே கிழக்குத் தேர்தல்
ஐ.நா.வின் மனிதாபிமான இராணுவ தலையீட்டுக்கு வலியுறுத்தல்
பிள்ளையானை முதலமைச்சராக்குவதாக ஜனாதிபதி ஒருபோதும் உறுதியளிக்கவில்லை
வில்பத்துக்குள் இருவர் சுட்டுக்கொலை
அரசியல் பச்சோந்திகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்
மு.கா.ஒத்துழைப்புடன் ஐ.தே.க. கிழக்கு மாகாணத்தை கைப்பற்றும்
சாதாரணதரப் பரீட்சை; வட, கிழக்கு மாணவர்கள் பெரும் சாதனை
`பிரபாகரன்' படத்துக்கு இடைக்காலத் தடை
வடக்கு போர்முனையின் கடும் எதிர்ப்பால் பாகிஸ்தானிடம் அவசர உதவி கோருகிறது இலங்கை
மடுப் பகுதியை சமாதான வலயமாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் அமைதிப் பேரணி
மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தினால் செட்டிகுளத்தில் கடத்தப்பட்ட 7 பேர் விடுதலை
மழையினால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நிவாரணஉதவிகளை வழங்க வேண்டும்
டாக்டர் முத்துலிங்கத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் தேவானந்தா சந்திப்பு
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சருடன் ரோகித்த போகொல்லாகம சந்திப்பு
நாவலப்பிட்டியில் கடும்மழை இயல்புநிலை ஸ்தம்பிதம்
வன்னியில் இராணுவ நடவடிக்கை இடம்பெற்றால் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள்
உலக வங்கிப் பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம்
பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம்
விசுவமடுப்பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் படையினர் கடும் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்
மல்வத்தயில் பஸ்- வான் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் பலி
கிழக்கு மாகாணசபை தேர்தலில் மூவின மக்களும் அச்சுறுத்தப்படும் நிலை
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் 120 தொகுதிகளில் ஆர்ப்பாட்டம்
மின்னல் தாக்குதலில் மேலும் ஒரு சிப்பாய் மரணம்
தாழ்வுபாட்டை சேர்ந்த குடும்பஸ்தர் வெள்ளைவானில் அழைத்து செல்லப்பட்டார்
ஹெப்பிட்டிக்கொலாவவின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைப்பு
இலங்கையிலிருந்து பொருட்கள் கடத்திய 5 இராமேஸ்வரம் மீனவர்கள் கைது
ஜனாதிபதி அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம்
பிரதி பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றில் மனு
அநுராதபுர நீரோடையில் 5 மோட்டார் குண்டுகள் மீட்பு
கொடக்கவெல வாகன விபத்தில் ஒருவர் பலி
இடி மின்னல் தாக்கி இருவர் பலி
2 1/2 மாதத்தில் 6 டெங்கு நோயாளர் மரணம் 2096 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை
`பொசன்' பண்டிகைக்காக கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் 28 பாடசாலைகள் மூடப்படுகின்றன
இடிமின்னல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
கண்டி வீதி வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
எட்டு மாணவர்கள் ஜப்பான் செல்ல தெரிவு
17 பேரையும் அக்ஷன்பாம் நிறுவனம் காப்பாற்றத் தவறியமை முதல்பிழை
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை
இலங்கையில் சிறுபான்மையினர் உரிமை மீறப்பட்டமையின் விளைவே யுத்தம்
சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான யுவதி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
யாழ்.மாவட்ட தொண்டராசிரியர் நியமனத்தில் குழறுபடியென பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு
மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்கள் திருகோணமலையில் மீளக் குடியமர்வு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com