Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
[30 - April - 2008] [Font Size - A - A - A]
* அதிபர்கள் சந்திப்பில் பிரதிக் கல்வி அமைச்சர்

மலையகத்தில் கணித, விஞ்ஞான பாடத்துறைகளை விருத்தி செய்து வைத்தியர்கள், பொறியியலாளர்களை உருவாக்குவதே தனது அவா என பிரதிக்கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தின் கல்வி நிலைமைகளை ஆராயவென பதுளை பிரிஜ் ஹோட்டல் மண்டபத்தில் கடந்த 18 ஆம் திகதி ஊவாமாகாண பாடசாலை அதிபர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் தலைமை வகித்து பேசும்போதே சச்சிதானந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊவாமாகாண 58 பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அவர் தகவல் தருகையில்;

இம்முறை ஊவா மாகாணத்தில் 900 மாணவர்கள் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்து க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதிபெற்றிருக்கின்றார்கள். இது மலையகத்தின் கல்வியில் ஏற்பட்டிருக்கின்ற புரட்சியை எடுத்துக் காட்டுகின்றது. 2008 ஆம் ஆண்டு இந்த க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக இன்று நாங்கள் ஆராய்ந்தோம். அதன் பிரகாரம் தரம் 6 தொடக்கம் தரம் 9 வகுப்புகளின் கற்றல் , கற்பித்தல் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பயிற்சிப் பட்டறைகளை நடாத்த நாங்கள் இன்று தீர்மானித்துள்ளோம்.

மாணவர்களை க.பொ.த. சாதாரண தரத்திற்கு ஆயத்தம் செய்யுமுகமாக தரம் 9 வகுப்புக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ், சமூகக்கல்வி, ஆங்கிலம் , சமயம் ஆகிய பாடங்களை விசேடமாக நடத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி அவர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை தரம் 10 , தரம் 11 கணிதம், விஞ்ஞானம் , ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு செயலமர்வுகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 2007 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியடைந்து க.பொ.த.உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கும் இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பரிசில்களை வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த 5 ஆண்டு காலப்பகுதிக்குள் மலையகத்தில் கணித, விஞ்ஞானத் துறைகள் விருத்தியுற்று வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் உருவாக்குவதே எனது அவா. ஊவா மாகாணத்தில் க.பொ.த.உயர்தரத்தில் கணித, விஞ்ஞானப் பிரிவுகளை பசறை தமிழ்த் தேசியப் பாடசாலை, சரஸ்வதி தமிழ் தேசியப் பாடசாலை, குருத்தலாவை முஸ்லிம் தேசியப் பாடசாலை , பண்டாரவளை தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பதுளை தமிழ் மகளிர் மத்திய மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பித்திருப்பதுடன் இப்பாடசாலைகளுக்கு 70 25 சதுர அடி அளவிலான விஞ்ஞான ஆய்வுகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இப்பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் வளங்கள் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com