Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
[30 - April - 2008] [Font Size - A - A - A]
*தமிழ்க் கூட்டமைப்பு சீற்றம்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக இந்தியா இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனை வழங்கவுள்ளதாக இந்தியப் பத்திரிகை செய்தி குறித்து இலங்கையில் ஆச்சரியம் தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகள் பலர் மற்றும் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் இந்த விடயம் குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்த செய்தியானது சரியாக இருக்குமானால், தமக்கு எதிரான இனப்படுகொலைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு புதுடில்லி உதவியளிக்க முடிவு செய்துவிட்டது என்றே பொருள்படும் என்று இலங்கைத் தமிழர்கள் கூறியுள்ளனர்.

`இது தொடர்பாக என்னால் எதுவும் கூறமுடியாது. ஏனெனில், இதுபற்றி எனக்குத் தெரியாது' என்று வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகண நியூவின்ட் பிரஸ் இணையத்தளத்துக்கு கூறியுள்ளார்.

ஆயினும், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கின்றது என்று நான் நினைக்கவில்லை. பாதுகாப்பு முறைமைகள் மற்றும் பயிற்சியையே இந்தியா வழங்கி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பாக தான் அறிந்திருக்கவில்லையென பாதுகாப்பு விவகார நிருபர் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார். அதேசமயம், மற்றொரு பாதுகாப்பு விவகார நிருபரான சாமிந்திர பெர்னாண்டோ கூறுகையில்; வேறொரு நாட்டிடம் ஆயுதம் வாங்குவதற்கு இந்தியா இலங்கைக்கு நிதியுதவி வழங்காதெனவும் இந்தியா விரும்பினால் கொடுப்பனவு அடிப்படையில் ஆயுதங்களையே வழங்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க இந்தச் செய்தி சரியானதென்றால் தமிழர்களும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு புதுடில்லி உதவியளித்து வருகின்றது என்ற முடிவுக்கு வராமல் இருக்க முடியாதென யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழர்களை யுத்த ரீதியாக இலங்கை அரசாங்கம் நசுக்குவதற்காக இலங்கைக்கு உதவுவதன் மூலம் வட, கிழக்கில் தமிழ் பகுதிகளில் தனது பொருளாதார நலன்களை மேம்படுத்தி பாதுகாக்க முடியுமென இந்தியா நினைக்கிறது. அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமையை பொருட்படுத்தாமல் உதாசீனம் செய்து இந்நடவடிக்கை இடம்பெற்றால் தமக்கு மத்தியில் இந்திய முதலீடுகள் இடம்பெறுவதை அவர்கள் வரவேற்க மாட்டார்கள் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரித்தார்.

திருமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 மெகாவாட் அனல் மின் உலையை நிறுவ இந்திய அரசாங்கம் இணங்கியிருப்பதையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

23 கிராமங்களைச் சேர்ந்த 17 ஆயிரம் தமிழர்களின் நிலைமையை கவனத்திற்கெடுக்காமல் இந்த நடவடிக்கைக்கு இந்தியா இணங்கியுள்ளது. சம்பூருக்கு வெளியே இந்தப் 17 ஆயிரம் தமிழர்களும் அகதி முகாம்களிலும் ஏனைய இடங்களிலும் அவல வாழ்வை மேற்கொள்கின்றனர்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com