Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 30, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
[30 - April - 2008] [Font Size - A - A - A]
* மோசமான காலநிலை சில தினங்கள் நீடிக்கும்

ரொஷான் நாகலிங்கம்

நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையாலும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு 7,200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் என்.பி. ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களிலும் பியகம கிருந்திவெல மற்றும் களனிப் பகுதிகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாகவே நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடன் மழை பெய்துவருவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு 650 கிலோமீற்றர் வடகிழக்காகவே இந்த தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையத்தை சேர்ந்த ஆனந்த பெரேரா தெரிவித்ததுடன் இந்தக் காலநிலை அடுத்த சில தினங்களுக்கு தொடர்ந்திருக்குமெனவும் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை ஓரளவு தணிந்திருந்த நிலையில் இரத்தினபுரி பகுதியில் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு முடிவடைந்த 24 மணிநேரத்தில் 60 மில்லிலீற்றர் மழை பெய்ததாக அம்மாவட்டத்துக்குப் பொறுப்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி களுகங்கையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 27 அடியாகவிருந்த போதிலும் நேற்று 25 அடியாக குறைவடைந்துள்ளது. அங்கு வெள்ள நீர் வழிந்தோடியதையடுத்து, இரத்தினபுரி நகரில் நேற்று போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.

கொழும்பு - பதுளைக்கிடையிலான போக்குவரத்தும் நேற்று வழமைக்குத் திரும்பியபோதும் இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் சில பகுதிகளில் கடும் வெள்ளம் காணப்பட்டதால் போக்குவரத்து நடைபெறவில்லை.

களனி கங்கை மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் பெருக்கெடுத்ததால் கேகாலை, எட்டியாந்தோட்டை, தெஹியோவிற்ற, புளத்கோபிட்டிய, ருவான்வெல மற்றும் தெரணியகலை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதனை சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, களனி கங்கையின் தாழ்வான பகுதிகளான களனி - பியகம வீதியில் கடுவெல நகரை அண்மித்த 13 ஆவது மைல் பகுதியில் சியம்பலாவ சந்தியும் பியகம, பண்டாரவத்தை சந்தியும் நீரில் மூழ்கியுள்ளன.

சேதுவத்தை கறுத்தப்பாலத்துக்கு அண்மையிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அது தொடர்பாக அபாய எச்சரிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கலவெல்லாவ, ஹொரண, அக்குராவ தோட்ட நீர்மட்டம் குறைவடைந்துள்ள போதும் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய பொறியியலாளர் லக்சிறி இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

இதுபோல் எகலியகொட, கந்தேதென்ன, அத்தலிகொட, பெல்மடுவ, பாத்தகட, இரத்தினபுரி மற்றும் ஏலபெத்த பகுதிகளிலும் மண்சரிவு மற்றும் மண்கட்டிகள் வீழ்வதற்கான அபாயநிலை தோன்றியுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகள் அப்பிரதேசங்களிலுள்ள மாவட்ட செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதுடன் இதற்குத் தேவையான நிதியை வழங்கியுள்ளதாக அனர்த்த சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி அனர்த்தத்தால் ஏழு பேர் பலியானதுடன் இவர்களது மரணச் சடங்குகளுக்கு 15 ஆயிரம் ரூபா அரச அதிபர் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் சேதமடைந்த மீன்பிடிப் படகுகளுக்கான நட்டஈடு வழங்குவது குறித்த தீர்மானமெதனையும் மேற்கொள்ளவில்லையென மீன்பிடி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பாக தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
உணவு நெருக்கடியை கையாள செயலணிக் குழுவை உருவாக்கும் ஐ.நா.
அணுஆயுதப் பரிகரணத்திற்கான தேவையை இலங்கை, ஈரான் கூட்டாக வலியுறுத்தல்
வெள்ளம், மண்சரிவால் 7 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்வு
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
இன்று நள்ளிரவு வரை வீரவன்ச காலக்கெடு தவறினால் நாளை புதிய கட்சி
வீதி விபத்தில் மேர்வின் சில்வா படுகாயம் களனி பிரதேச சபைத் தலைவர் ஸ்தலத்தில் பலி
சம்பூரிலிருந்து 17 ஆயிரம் மக்களை வெளியேற்றியதற்கு பாதுகாப்பை காரணம் காட்டுவது பொருத்தமற்ற விடயம்
ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்
கொழும்பின் யுத்தத்துக்கு டில்லியின் கடன் உதவி இனத்தை அழித்தொழிப்பதற்கான ஒத்தாசையா?
வவுனியாவில் கடத்தப்பட்ட மாணவன் விடுவிப்பு
வெளிநாடு செல்ல போலி முகவரிடம் ரூபா 3 கோடி கொடுத்து ஏமாந்த 10 பேர்
மோசமான பாதிப்பை கவனத்தில்கொண்டு மே 5 -11 வரை நச்சு தடுப்பு வாரம் பிரகடனம்
இலவச பாடநூல் விநியோகத்தில் தமிழ்மொழிமூல மாணவர்கள் மோசமாகப் பாதிப்பு
மேற்குலகின் ஆதிக்கத்திலிருந்து மீட்சிபெற்ற ஈரானின் அனுபவத்தை பாடமாக கற்க வேண்டும்
ஸ்கொட்லாண்ட் பொலிஸாரின் தேடுதலில் லண்டன், வேல்ஸில் 3 தமிழர்கள் கைது
கொக்குவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலை
கிழக்கில் தபால்மூல வாக்களிப்பில் 75 சதவீதமானோர் பங்கேற்பு
போராளிப் பாடகர் குட்டிக்கண்ணன் மரணம்
தமிழக மீனவர் 6 பேர் யாழ்.சிறைச்சாலையில்
63 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டப்பட்ட படகு இன்று நெடுந்தீவு மீனவர்களிடம் கையளிப்பு
உணவுப் பொருள் விலை அதிகரிப்புக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு
முகத்துவாரம் பகுதியில் இரு இளைஞர்கள் கடத்தல்
ரெலோ அமைப்பிலிருந்து மூவரை நீக்கியதாக அபுயூசூவ் அறிக்கை
பொறியியலாளர்கள் , வைத்தியர்களை மலையகத்தில் உருவாக்குவதே எனது திட்டம்
மலையக அரசியல் தொழிற்சங்க அமைப்புக்களின் மேதினக் கூட்டம்
அக்ஷன்பாம் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் பல்வேறு சமூக அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டதை அறிவேன்
வடக்கில் யுத்தம் நடைபெறும் போது தெற்கில் இன ஐக்கியத்துக்கு வித்திடப்படுகிறது
அரசின் சலுகைகளுக்காக வாக்களித்தால் உரிமைகளற்ற சமூகமாக முஸ்லிம்கள் மாற்றப்படுவர்
கிழக்கு மாகாணசபை தேர்தலென்பது அரசு தனக்குத் தானே வெட்டிய புதைகுழி
ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நடவடிக்கை
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com