மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ் டெனிஸ் இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நாடல் சாம்பியன் கிண்ணத்தை வென்றார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரருடன் மோதிய நாடல் 7-5, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். 3 முறை பிரெஞ் ஓப்பன் பட்டத்தை வென்றுள்ள நாடல், போட்டியின் போது முதல் செட்டில் 0-4 என்று பின் தங்கியிருந்தார். தொடர்ந்து 4 ஆவது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சிறப்பான சேர்விஸ்களை வீசிய ரோஜர் பெடரருடன் 3 ஆவது தொடர் வெற்றியை பெற்றார். இதுவரை 15 முறை பெடரருடன் மோதியுள்ள நாடல், 9 முறை வெற்றி பெற்றுள்ளார். களிமண் ஆடுகளத்தில் 8 முறை நடைபெற்ற போட்டிகளில் இது நாடலுக்கு 7 ஆவது வெற்றியாகும்.