பலத்த பாதுகாப்புக்கிடையே ஒலிம்பிக் ஜோதி வியட்நாம் தலைநகர் வந்தடைந்தது. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக் ஜோதி வடகொரியாவிலிருந்து நேற்றுக்காலை பலத்த பாதுகாப்புக்கிடையே வியட்நாம் தலைநகரை வந்தடைந்தது.
பெருமளவு பொதுமக்கள் வியட்நாம் மற்றும் சீனத் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தியபடி விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர். தலைநகரில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றது.
ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதைத் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.