Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* பிரதியமைச்சர் ஜெகதீஸ்வரன் தெரிவிப்பு

உலகத்தின் மாற்றங்களுக்கும் சவால்களுக்கும் முகங் கொடுக்கக் கூடிய ஒரு மலையக சமுதாயமொன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மேற்படி அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்ற மலையக மக்களுடனான ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

உலகத்தில் இந்தியத் தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் முறையான அரசியல், கல்வி மற்றும் ஏனைய உரிமைகளை அதிகம் பெற்று வாழும் சமூகமாக எம் சமூகமே காணப்படுகின்றது என்பதை நினைக்கும் போது பெருமையாகவும் இந்த அனைத்து உரிமைகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த மூத்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் கடும் முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் பெறப்பட்டது என்பதை நினைக்கும் போது நானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவனாகப் பெருமிதம் அடைகிறேன்.

எப்போதுமே கையேந்திகளாகவும், மற்றவர்களின் அற்ப சொற்ப விளையாட்டுபகரணங்கள், வீட்டுக் கூரைத் தகடுகள், சீமெந்து என்பவற்றிற்கு அடிமையாகாது அவர்களின் அற்பமான ஊடக பிரசார முயற்சிகளுக்கும் அடிபணியாமல் எமது மலையக சமுதாயம் ஓர் புத்துணர்ச்சியை பெறவேண்டிய கட்டாய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளது.

ஒரு புறம் இவ்வகையான அற்ப சலுகைகளுக்கு நம் மக்கள் பகடைக் காய்களாக மாற்றப்பட்டிருப்பதை நினைக்கும் போது எமது மறைந்த தலைவரின் முயற்சி, அவர் சிந்திய வியர்வைத் துளிகள் அர்த்தமற்றவைகளாகப் போய்விடுமோ என்ற அச்ச நிலையே ஏற்படுகின்றது.

ஓர் சமுதாயத்தின் உழைப்பின் பயனாலேயே இன்று மலேசியா இந்த அளவு ஓர் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஒரு காலத்தில் எம்மைப் போன்றே மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட இந்திய தமிழர்கள் ஆரம்பத்தில் எம்மைப் போன்றே தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

ஆனால் அம்மக்களின் கடும் உழைப்பு, தேடல், வாழ்க்கையை வெற்றி கொள்ள வேண்டும் என்ற என்ற வெறி மற்றும் உந்துதல்கள் என்பவற்றால் மலேசியாவை மட்டுமல்லாது தம் வாழ்க்கைத் தரத்தையும் மிகவும் சிறப்பாக உயர்த்திக் கொண்டுள்ளனர்.

இன்றைய மலேசியாவில் இந்தியர்களின் அரசியல் உரிமைகள் நம்மை விட மிகக் குறைந்து காணப்பட்டாலும், வாழ்க்கைத் தரம் தொழில் துறை, கல்வி என்பவற்றை நோக்கும் போது அவர்கள் எம்மை விட பன் மடங்கு மேலோங்கிக் காணப்படகிறார்கள். இதற்கான முழுக் காரணமும் தத்தமது உழைப்பின் பால் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே ஆகும்.

ஓர் சமுதாயத்தின் வளர்ச்சியானது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகளை மட்டும் தங்கியிருப்பதில்லை. தத்தமது வாழ்க்கை முறை ஏற்படுத்திக் கொள்ளும் மாற்றங்கள், தம் மீதான நம்பிக்கை, தொழில் மாற்றம், எதிர்காலம் பற்றிய தேடல் போன்ற ஏனைய காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தற்போதைய அரசாங்கத்தால் மலையக இளைஞர்களை மையப்படுத்தி பல தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமாக மலையக காவல் நடவடிக்கைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை மலையகத் தமிழ் இளைஞர்களைக் கொண்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாது நம் மக்களுக்கான தபால் விநியோகத்திற்கான ஆட்சேர்ப்பு,கிராம சேவையாளருக்கான ஆட்சேர்ப்பு என்பவை மலையக இளைஞர் யுவதிகளின் கணிசமான தொகையைக் கருத்திற் கொண்டே செயற்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது வேலைவாய்ப்புப் பணியகத்தாலும் பல்வேறு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டும் வருகின்றன.

இதுவரை காலமும் வீட்டு வேலைகளுக்காக மட்டுமே எமது மலையகப் பெண்களை வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்கு அனுப்பி வைப்பதை இனிவரும் காலங்களில் முற்றாகவே நிறுத்தி விட முயற்சிக்கும் ஜனாதிபதியின் பாரிய முயற்சிக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இனியும் தலைநகர் பகுதிகளுக்கோ அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கோ நம் பிள்ளைகளை வீட்டு வேலை செய்வதற்கு அனுப்புவதை முற்றாகத் தடைசெய்ய வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோர்களின் கையிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது.

பணத்துக்காக எம் பிள்ளைகளை அனுப்பி அவர்கள் அனுபவிக்கும் இன்னோரன்ன துன்பங்களை இனியாவது அடியோடு ஒழிப்போம். அவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சி என்பவற்றை வழங்குவதன் மூலம் எம் சமுதாயமேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான தொழில் துறைகளில் ஈடுபட வைக்க வேண்டும். இதுவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாகவும் இருந்து வருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவம் பற்றி நாம் அறியாதது ஒன்றுமில்லை. ஆனால் வெளி மாவட்டங்களில் போன்று குறிப்பாக எமது மலையக இளைஞர் சமுதாயமும் அவற்றின் தேர்ச்சியுற்றிருப்பது எமது தலைவரின் கவனத்தை ஈர்த்ததன் காரணமே இன்று எம் மலையகத்தில் கணினி நிறுவனங்கள் 50 பிரஜா சக்தி அமைப்புகளை நிறுவி அவற்றினால் வழங்கப்படும் கணினிப் பயிற்சித் திட்டங்களை எமது படித்த மலையக இளைஞர் சமுதாயம் இலவசமாக அனுபவிக்க வேண்டிய ஏற்பாடுகளை ஒரு தியாக சிந்தனையோடு மேற்கொண்டுள்ளார்.

அது மட்டுமல்லாது இனிவரும் காலங்களில் மேலும் 350 தோட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் அவரது முயற்சிக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com