Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* பிரிட்டிஷ் தூதுக் குழுவிடம் 3 தமிழ் கட்சிகள் வேண்டுகோள்

பி.ரவிவர்மன்

தொடரும் யுத்த நடவடிக்கைகளை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற குழுக்களின் அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த நான்கு பிரதிநிதிகளுக்கும் மூன்று தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்குமிடையே கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஹோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம் பெற்ற இந்தச் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) த்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.- பத்மநாபா) யின் சிரேஷ்ட முக்கியஸ்தர் என்.ஷ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எந்தவொரு தீர்வையும் காண முடியா நிலையில் இழுபட்டுச்செல்லும் இலங்கையின் இன நெருக்கடித்தீர்வு முயற்சிகள் தொடர்பில் பிரிட்டிஷ் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் எவ்வாறான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது தொடர்பான அறிக்கையொன்றை சமர்பிப்பதற்காகவே இலங்கைக்கு விஜயம் செய்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் அபிப்பிராயங்களை பெற்று வருவதாகவும் பிரிட்டிஷ் அனைத்து கூட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று தமிழ்க் கட்சிகளுடனான இந்த சந்திப்பு தொடர்பாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடியான பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர்.

தொடரும் இவ்வாறான நெருக்கடியான நிலைமைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமெனில் நிரந்தரமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வொன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கு சர்வதேச சமூகத்தின் காத்திரமான பங்களிப்பு அவசியமானதொன்றாகும்.

விடுதலைப்புலிகளுடன் மட்டுமல்ல சகல தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்து பேசுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு நீதியானதும் நேர்மையானதுமான அரசியல் தீர்வொன்றை எட்ட முடியும்.

அதேநேரம் தென்னிலங்கையில் ஆட்சியதிகாரத்திலிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் இன நெருக்கடி தீர்வு முயற்சிகள் தொடர்பான வெவ்வேறு கருத்துக்களை கைவிட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு முதலில் முன்வரவேண்டும் அதற்கான அழுத்தத்தையும் சர்வதேச சமூகமே வலியுறுத்தி முன்னெடுக்க வேண்டும்.

இன நெருக்கடிக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்று காணப்படாவிட்டால் இலங்கையில் அமைதியை உருவாக்க முடியாது. எனவே சர்வதேச சமூகம் தான் அதற்கான காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென்றும் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்திக் கூறப்பட்டதாகவும் புளொட் தலைவர் சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com