Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் றிசாட் பதியுதீன்

ஒரு இனத்தை மற்றொரு இனம் அடக்கி ஆளாமல் எல்லா இனங்களும் சமத்துவமாக ஒருவரை ஒருவர் மதிக்கின்ற நிலைமை இந்த நாட்டில் ஏற்பட வேண்டும் என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புனர்வாழ்வு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்:

நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் கிடைக்கும் நிதியைக் கொண்டு மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படும் சகல அபிவிருத்திப் பணிகளையும் எம்மால் செய்ய முடியும்.

சகல இனமக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பதே சகல மக்களதும் விருப்பமாகும்.

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வன்னி மாவட்டம் முக்கியமானது. இதனால், இம்மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கு பல வழிகளிலும் நிதி உதவிகள் எமக்குக் கிடைத்து வருகிறது.

ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழும் நிதி கிடைத்துள்ளது.

ஆனால், இங்கு கேட்கும் குண்டுச் சத்தங்களும் வெடிச்சத்தங்களும் மக்களைப் பெரிதும் பீதிக்குள்ளாக்கி வருகின்றது. எனவே, நாட்டில் ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் எமது பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனது உரையில் கூறியதாவது;

வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டபோதிலும் தீர்வு காண முடியாத விடயங்கள் பல உள்ளன. இதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சில பணிகளுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளதால் நாம் அப்பணிகளை செய்ய முடியாதுள்ளது.

மதவாச்சி சோதனைச் சாவடியூடாக நேரடியாக வன்னி மாவட்ட மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலைமைகள், கஷ்டங்கள் குறித்து நாம் பாராளுமன்றத்திலும் பல தடவைகள் குரல் எழுப்பினோம். ஆனால், எதுவித தீர்வும் கிடைக்கவில்லை.

அதனால், மதவாச்சி சோதனை நிலையத்தில் வடபகுதி மக்கள் எதிர்ே நாக்கிவருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதீன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com