Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் மகிந்த சமரசிங்க

ரொஷான் நாகலிங்கம்

ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஏழாவது அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதுவும் எடுக்கவில்லையென மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்ததுடன், இதற்கு மனித உரிமையை பேணி பாதுகாக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரது அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் ;

ஜெனிவாவில் நான்கு வாரங்களாகஇடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணைக்குழுவின் ஏழாவது அமர்வு கடந்த 3 முதல் 28 ஆம் திகதி வரை இடம் பெற்ற போது இலங்கைக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

மனித உரிமைக்கான பேரவையானது இலங்கை அரசு மற்றும் பாதுகாப்பு படையினரின் நிகழ்ச்சி நிரலில் மனித உரிமை மீறல் இல்லை என்பதுடன், மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு எடுத்த தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அமர்வின் போது ஆராய்ந்தது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் உரிய வகையில் முன்னெடுப்பதனை இந்த ஆராய்வில் கண்டறிந்ததன் காரணமாகவே எந்த எதிரான முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டு வருவதுடன் மனித உரிமையைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கு எடுத்த நடவடிக்கைகளை பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த அமர்வில் உள்நாட்டு, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பல மேற்கு நாடுகளின் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னரே எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு காரணம் அமர்வுக்கு முதல் கிழமை மேற்கொண்ட பிரசாரமே காரணமாகும். இலங்கை மனித உரிமை தொடர்பில் நீண்ட காலமாக ஐ.நா.வின் கொள்கையைக் கடைப்பிடிப்பதுடன் இதற்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுகின்றது.

இந்த அமர்வில் இலங்கை 5 விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை முன்வைத்தது. அதாவது மனித உரிமை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் பாரதூரமான வறுமை, சிறுவர் கடத்தல், விபசாரம், துஷ்பிரயோகம் மற்றும் உணவுக்கான உரிமை தொடர்பில் தீர்மானங்களை முன்வைத்தது.

ஆணைக்குழுவின் அடுத்த அமர்வு எதிர் வரும் ஜுன் மாதம் ஜெனிவாவில் இடம் பெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com