Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
[04 - April - 2008] [Font Size - A - A - A]
பொதுநலவாய நாடுகளின் புதிய செயலாளர் நாயகம் ஷ்ரீ கமலேஷ் ஷர்மாவை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் றோகித போகொல்லாகம கடந்த 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்து இலங்கைக்கும் பொதுநலவாய நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகள் தரக் கூடியதான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினர். இது பொதுநலவாய நாடுகளின் முதலாவது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஒருவருடனான முதற் சந்திப்புமாகும்.

பொதுநலவாய நாடுகளின் வளங்களை அநாதரவான மற்றும் வலுக்குறைந்த மக்களுக்கு உதவுவதான திட்டங்களுக்கு வழிகோலும் நோக்காக அமைச்சரின் உரையாடல் அமைந்தது. ஜனநாயகத்தின் அத்திபாரத்தைப் பலப்படுத்துவதற்கு ஸ்தாபன ரீதியான மேம்பாட்டிற்கு எப்படியாக பொதுநலவாய நாடுகள் உதவ முடியும் என்பதிலும் ஒருமைப்பாடு கண்டனர்.

உலகளாவிய அரசாட்சி முறைகளில் பொது நலவாய நாடுகளின் முன்னோடியான பங்காற்றல் என்பது பற்றியும் அவர்கள் கலந்துரையாடியதுடன் தங்களது பிராந்தியத்துடன் சம்பந்தப்பட்ட இப்பிரதேச பிராந்திய அமைப்புகளின் அதிகரிப்பான ஈடுபாடுகளைக் கருத்திற்கொண்டு அப்படியான அமைப்புகளுடன் பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய மிக அண்மித்த தொடர்பாடலைக் கொண்டிருத்தல் வேண்டியதன் அவசியமும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

கொழும்பில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் விவகார அமைச்சர்களின் கூட்டம், இவ்வருடத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் பயங்கரவாதம் என்னும் தலைப்பிலான அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டில் கொழும்பில் நடத்துவதற்குக் கோரப்பட்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டம் என்பனவும் அடங்கலாக பலதரப்பட்ட விடயங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடினார்.

பாகிஸ்தானை பொதுநலவாய சபைக்கு மீளச்சேர்த்தல் உட்பட பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களிலான குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடினார்கள்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com