பொதுநலவாய நாடுகளின் புதிய செயலாளர் நாயகம் ஷ்ரீ கமலேஷ் ஷர்மாவை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் றோகித போகொல்லாகம கடந்த 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்தித்து இலங்கைக்கும் பொதுநலவாய நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகள் தரக் கூடியதான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடினர். இது பொதுநலவாய நாடுகளின் முதலாவது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஒருவருடனான முதற் சந்திப்புமாகும்.
பொதுநலவாய நாடுகளின் வளங்களை அநாதரவான மற்றும் வலுக்குறைந்த மக்களுக்கு உதவுவதான திட்டங்களுக்கு வழிகோலும் நோக்காக அமைச்சரின் உரையாடல் அமைந்தது. ஜனநாயகத்தின் அத்திபாரத்தைப் பலப்படுத்துவதற்கு ஸ்தாபன ரீதியான மேம்பாட்டிற்கு எப்படியாக பொதுநலவாய நாடுகள் உதவ முடியும் என்பதிலும் ஒருமைப்பாடு கண்டனர்.
உலகளாவிய அரசாட்சி முறைகளில் பொது நலவாய நாடுகளின் முன்னோடியான பங்காற்றல் என்பது பற்றியும் அவர்கள் கலந்துரையாடியதுடன் தங்களது பிராந்தியத்துடன் சம்பந்தப்பட்ட இப்பிரதேச பிராந்திய அமைப்புகளின் அதிகரிப்பான ஈடுபாடுகளைக் கருத்திற்கொண்டு அப்படியான அமைப்புகளுடன் பரஸ்பரம் நன்மை பயக்கக்கூடிய மிக அண்மித்த தொடர்பாடலைக் கொண்டிருத்தல் வேண்டியதன் அவசியமும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
கொழும்பில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் விவகார அமைச்சர்களின் கூட்டம், இவ்வருடத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் பயங்கரவாதம் என்னும் தலைப்பிலான அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டில் கொழும்பில் நடத்துவதற்குக் கோரப்பட்டிருக்கும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டம் என்பனவும் அடங்கலாக பலதரப்பட்ட விடயங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடினார்.
பாகிஸ்தானை பொதுநலவாய சபைக்கு மீளச்சேர்த்தல் உட்பட பொதுநலவாய நாடுகளின் அமைச்சர்களிலான குழு சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடினார்கள்.