மரண வீட்டுக்குச் சென்ற உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதலில் ஈடுபட்ட மூவரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றையவர் தலைமறைவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிட்டபெத்தர, தங்கொலுவ தோட்டத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கே.கருப்பையா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பார்வதி என்ற பெண்ணும் வேறு சிலரும் காயமடைந்துள்ளதாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
பிட்டபெத்தர தங்கொலுவ தோட்டத்தைச் சேர்ந்த தம்பிரான் என்ற 78 வயது வயோதிபர் காலமானதையடுத்து, உறவினர்கள் பலரும் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள வந்ததாகவும் இந்து சமயக்கிரியைகளுக்கு தண்ணீர் எடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறையடுத்து சகலரும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பெரும் பதற்றம் ஏற்பட்டதையடுத்து காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிஸ் காவலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இது தொடர்பாக பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.