Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசு எச்சரிக்கை

-எம்.ஏ.எம்.நிலாம்-

இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளாமல் முன்னுரிமை அடிப்படையிலான சலுகைகளை வெளிநாட்டிலிருந்து அரசு பெற்றுக் கொள்ள முடியாதென மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் சுயாதிபத்தியத்துக்கும் இறைமைக்கும் பங்கமேற்படுத்தும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள அரசாங்கம், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கின்றது.

நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அரசு விடுத்த விசேட அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இறக்குமதித் தீர்வை வரிச்சலுகை முறையொன்றின் அடிப்படையில் எமது நாட்டின் ஆடை உற்பத்திகள் ஏற்றுமதிக்காக கிடைக்கப்பெற்றுள்ள ஜீ.எஸ்.பி + அனுகூலத்தை நாட்டுக்குக் கிடைக்கமுடியாத விதத்தில் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடந்த சில வாரங்களாக சில சக்திகளால் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கை தொடர்பாக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

தங்களது குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ள முடியாத தர்க்கங்களை உருவாக்கி நாட்டுக்கு மிக மோசமான இழப்பை ஏற்படுத்துவதற்கு எமது நாட்டின் பிரஜைகள் சிலரே ஈடுபடுவது கவலை தரக் கூடியதாக உள்ளது.

இந்தப் பிரசார நடவடிக்கையின் மூலம் இலங்கை அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்படாமல் இந்த வரிச்சலுகைத் திட்டம் ஐரோப்பிய சமூகத்தால் முன் வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட முடியாது என பிரசாரப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மைக்குப் புறம்பானதும் முறையற்ற தர்க்கத்தை முன் வைத்திருப்பது ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும். அதை வைத்துக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச மட்டத்தில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை இலங்கையில் அங்கீகரிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் இலங்கை அரசியலமைப்பின் மூலம் தடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அரசு இதனை முற்றுமுழுதாக நிராகரிக்கிறது. அரசின் நிலைப்பாட்டை சரியானதென்று உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டுக்கு அபகீர்த்தியையும் இழப்பையும் ஏற்படுத்தக்கூடிய தவறான பிரசாரங்களை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முன்னெடுக்கப்படுவது கவலை தரக்கூடியதாகவே காணப்படுகின்றது.

இதனிடையே, 2008 மார்ச் மாதம் 16 ஆம் திகதியிடப்பட்டு விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்ட நபரொருவரால் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடிதமொன்றில் மேற்படி வரிச்சலுகைத் திட்டத்தை உடனடியாக இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் கூறுவது போன்று இத்திட்டத்துக்காக அரசியலமைப்புத் திருத்தம் அவசியப்படவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் இதற்குத் தாராளமாகப் போதுமானதாகவே காணப்படுகிறது.

உள்நாட்டு அரசியல் நலன்களுக்காக சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு கிடைக்கும் சலுகைகளை முறியடிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையானது அரசியல் நாகரிகமற்ற செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது. நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றாமல் குறுக்கு வழிகள் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்திலும் பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்துவதிலும் செயற்பட முனைவது சிரேஷ்ட அரசியல் தலைவருக்குரிய அழகான செயலாக கருத முடியாதுள்ளது.

இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்க முடியாது. இச்செயற்பாடுகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க பின்வாங்கப் போவதில்லை. நாட்டின் வர்த்தக, வாணிப மேம்பாட்டை பாதுகாப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச மட்டத்தில் அரசு உறுதியுடன் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com