Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* அரசாங்கம் தெரிவிப்பு

-எம்.ஏ.எம்.நிலாம்-

கிழக்கு மாகாண சபைத்தேர்தலுக்காக பிள்ளையான் குழுநிராயுத பாணிகளாக்கப்பட மாட்டாதென உறுதிபடத் தெரிவித்திருக்கும் அரசாங்கம், தேர்தலை ஜனநாயக ரீதியில் வன்முறைகளின்றி நடத்தி முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசு தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் இங்கு மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நீதியாகவும், நேர்மையுடனும் நடத்துவதில் அரசு தீவிர ஈடுபாட்டைக் காட்டி வருகின்றது. நாட்டின் அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தல் வன்முறைகளற்றதாகவும், நீதியாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் காணப்பட்ட போதிலும் அத்தேர்தலின் போது அவர்கள் ஒரு ஆயுதத்தைக் கூட பயன்படுத்த வில்லை. எவரும் அச்சுறுத்தப்படவோ தாக்கப்படவோ இல்லை. ஒரு கொலை அச்சுறுத்தல் கூட இடம்பெறவில்லை.

இந்த நிலையில் பிள்ளையான்குழுவை நிராயுதபாணிகளாக்க வேண்டிய அவசியமோ, அவசரமோ, அரசுக்கு ஏற்படவில்லை. அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே எதிரணியினர் பிள்ளையான் குழுவை நிராயுதபாணிகளாக்க வேண்டுமென பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணிகளாக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. அரசு அக்குழுவை நிராயுதபாணிகளாக்கப் போவதுமில்லை. அக்குழு ஆயுதங்களை வைத்திருந்தாலும் தேர்தல் பிரசாரங்களின் போதோ, வாக்களிப்பின் போதோ ஆயுதங்களைக் கொண்டு திரியவில்லை. மக்களை அச்சுறுத்தவுமில்லை. அவர்கள் ஜனநாயகரீதியிலேயே மட்டக்களப்பு உள்ளூராட்சித் தேர்தலின் போது நடந்து கொண்டனர்.உள்ளூராட்சித் தேர்தலின் போதும், வாக்களிப்பு தினத்திலும் அவர்கள் ஆயுதங்களை பகிரங்கப்படுத்திக் கொண்டு நடமாடவில்லை.

எதிர்காலத்திலும் அது போன்றே அவர்கள் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கின்றது. அதை மீறி சட்டரீதியற்ற முறையில் எவராவது தேர்தல் காலத்தில் ஆயுதங்களுடன் நடமாடினால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்குமாறு அரசு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. இன்று ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் கூட போட்டியிட முன்வந்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். இத்தேர்தலை ஜனநாயக ரீதியில் நடத்தி முடிக்க இது உதவும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட முக்கியமான மூவர் தமது எம்.பி.பதவிகளைத் துறந்து மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதன் மூலம் இத்தேர்தலின் முக்கியத்துவம் எத்தகையது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

அரச தரப்பினரோ, எதிர்க்கட்சிகளோ கிழக்கின் முதலமைச்சர் யார் என்ற தீர்மானத்தை எடுக்கவில்லை. தேர்தல் முடிந்து வெற்றியீட்டும் கட்சி முதலமைச்சர் யார் என்பதை அறிவிக்கும். முன் கூட்டியே அதைத்தீர்மானிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com