புத்தளம் மாவட்ட கிரிக்கெட் அணிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக ஆண்டிமுனை விளையாட்டு மைதானத்தில் அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் போட்டி நிகழ்ச்சி உடப்பு ஸ்ரீ கந்தசுவாமி கழக இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சுமார் 31 கிரிக்கெட் கழக அணிகள் இதில் கலந்து கொண்டன. இறுதிச் சுற்றில் ஆராச்சிக்கட்டு `லோட்ஸ்' அணியும் உடப்பு ஸ்ரீ கந்தசுவாமி அணியும் மோதின. கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற இந்த இறுதிச் சுற்றின்போது ஆராச்சிக்கட்டு லோட்ஸ் அணி மூன்று ஓவர் முடிவில் 40 ஓட்டங்களைப் பெற்று கிண்ணத்தையும் 15,000 ரூபா பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.
உடப்பு ஸ்ரீகந்தசுவாமி அணி எட்டு ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 7,500 ரூபா பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது.