அமெரிக்காவின் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெடிபொருட்களை கடத்த முயன்ற பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பயணியை எப்.பி.ஐ.அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அவரது பையை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வெடிகுண்டுகளை தயாரிப்பது குறித்த விளக்க புத்தகமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
பிடிபட்ட பயணியின் பெயர் கெவின் பிரவுண் என்பதும் ஐமெக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அவர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவரா? எதற்காக வெடிகுண்டு மூலப்பொருள்களை கடத்த முயன்றார்? என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெறுகின்றன.