* இந்திய, அமெரிக்க அறிஞர்கள்
சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டுமென இந்திய, அமெரிக்க அறிஞர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் நரேன், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார்.
திபெத் மக்களின் கலாசாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி அமெரிக்க பாராளுமன்றத்தில் 2002 இல் திபெத்திய கொள்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் அடிப்படையில், திபெத்தில் தற்போது நடந்துவரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு கண்டனம் தெரிவித்து 1980 இல் மொஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணித்தது.
இதேபோல் பெய்ஜிங் ஒலிம்பிக்கையும் அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும் என்று நரேன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.