பிரிட்டனில் மிக அதிகளவில் சம்பளம் பெறும் உயர்மட்ட அரச அதிகாரிகளில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.
தாரா சிங் என்ற இந்தியர், பிரிட்டனில் ஏலிங் என்ற உள்ளூராட்சி அமைப்பின் தலைமை அதிகாரியாக இருக்கிறார். அவர் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம்.
10 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள், பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ஸ்ரேலிங் பவுண்ஸுக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகின்றனர். வரி செலுத்துவோர் அமைப்பு இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தாரா சிங் வாங்கிய சம்பளம் 1,95,000 பவுண்ஸ்களாகும். (பிரிட்டிஷ் பிரதமரின் சம்பளம் 188,849 பவுண்ஸ்) அதற்கு முந்தைய ஆண்டைவிட 58 சதவீதம் அதிக சம்பளத்தை தாராசிங் பெற்றுள்ளார்.
மேலும் குர்மெல் சிங் கன்டோலா, மஞ்ஜீத் ஜில், எச்.எஸ்.போகல், ஹிதேஷ் படேல், ஆர்.பத்ரிநாத் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.