Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* உதவி திட்டமிடல் பணிப்பாளர் தெரிவிப்பு

கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு அதிகாரிகளால் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் பாரிய வெற்றியைத் தரவில்லை இதனைக் கருத்தில் கொண்டே கமநெகும திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் ஜன சபா திட்டமும் கிராம மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. கல்முனை பிரதேச செயலகத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இதற்கென 4 கோடியே 20 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்திருப்பதோடு,இதன் இணைப்பாளராக மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸையும் நியமித்துள்ளாரென கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு.க. ராஜதுரை தெரிவித்தார்.

கல்முனை நற்பிட்டிமுனை அல்அக்ஸா மகாவித்தியாலய அஹமது மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற ஜனசபா அபிவிருத்திக் குழு அமைக்கும் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இங்கு ராஜதுரை மேலும் தெரிவித்ததாவது;

அபிவிருத்தி என்பது அதிகாரிகளால் மட்டும் அமுல்படுத்தப்படும் திட்டங்கள் எனும் வாதம் எம்மிடமிருந்து விடை பெற வேண்டும். இவ்வாறான திட்டங்கள் ஒரு போதும் வெற்றியடையப் போவதில்லை. அபிவிருத்தி வெற்றிகாண பிரதேச மக்களின் கருத்துகள் உள்வாங்கப்படுவதோடு, அனுபவசாலிகளின் மும்மொழிவும் சேர்க்கப்படுதல் அவசியமாகும். நகரத்தில் மாத்திரமன்றி கிராமத்தையும் அவை சென்றடையவேண்டும். இதனடிப்படையில் நற்பிட்டிமுனை பிரதேச 5 கிராம சேவையாளர் பிரிவும் தலா 14 லட்சம் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஜனசபா அதிகாரமிக்க அமைப்பாக எதிர்காலத்தில் மிளிரவிருக்கிறது. ஜனசபா குழுவே இத்திட்டங்களை முன் வைக்கவுள்ளது.இதற்கென கிராம மக்களின் ஆலோசனை பெறப்படும். தனிப்பட்டோரது விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமிருக்காது. திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அரச சுற்று நிருபப் பிரகாரமே இவை இயங்கும். வேலைத்திட்டங்களை கிராம அபிருத்திச் சங்கம், சமுர்த்தி சபைகள் எடுத்து செய்யமுடியும். திட்டங்களை தயாரிக்கும் பொறுப்பு ஜனசபாவுக்கு இருப்பது போல், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பிரதேச செயலகத்துக்கே உரித்தாகும்

மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ் உரையாற்றுகையில் ;

கடந்த கால வீதி அபிவிருத்தி திட்டமான மகநெகும போல் ஜனசபா திட்டம் இருக்கமாட்டாது. நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் மக்களுக்கு பிரியோசனம் அளிக்கப்போகிறது. பாதகமான செயல்திட்ட அமுலாக்கம் இங்கிருக்கமாட்டாது. விடயம் தொடர்பாக நானும் மாநகரசபை உறுப்பினர் றஹாப்தீனும் உயர்மட்டத்தில் பேசியுள்ளோம். இத்திட்டத்தை முன்மாதிரியான திட்டமாக அமுல்படுத்த விரும்புகிறோம் என்று கூறினார்.

கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம்.பஸால்,யூ.எல்.பதுறுதீன், திருமதி இஸ்மாயில் ஏ.ஸீ.எஸ். ஹமீட் மாநகரசபை உறுப்பினர்களான.சீ.எம்.முபீத், ஐ .எல். றஹாப்தீன், ஏ.எம்.றியாஸ், சமுர்த்தி உத்தியோகத்தர்களான எம்.யு. அஸ்வர், எம். அமீனுதீன் மற்றும் ஊர்மக்கள், உலமாக்கள், நலன் விரும்பிகள் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com