Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த

கடந்த 16 வருடங்களாக வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்துள்ளேன். கூடிய விரைவில் இந்நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.ஹாலித் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே கல்வி அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பிரேமஜயந்த அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டு குழு உட்பட அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர் அலி, ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரும் இந்நியமனம் குறித்து நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளை அபி விருத்தி செய்யவென உலக வங்கியிடமிருந்து ஆயிரம் மில்லியன் ரூபாவைப் பெற்றுள்ளேன். இதனால் கிழக்கு மாகாணப் பாடசாலைகள் துரித கதியில் முன்னேற்றம் அடையவுள்ளன.

நான் மேல்மாகாண முதலமைச்சராக இரு தடவைகள் 5 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். எனது தேர்தல் வெற்றிகளுக்கு மேல்மாகணத்திலுள்ள குறிப்பாக கொழும்பு வாழ் முஸ்லிம்கள் பெரிதும் துணை நின்றிருக்கிறார்கள் என்பதை நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன். அதனால் மேல்மாகாண பாடசாலைகளுக்குப் பல கட்டடங்களையும் ஏனைய பௌதிக வளங்களையும் பெற்றுக்கொடுக்க முடிந்தது.

முஸ்லிம்களின் உணர்வுகளை நான் நன்கறிவேன். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாசைகள் எவை என்பதை நான் நன்குணர்கின்றேன். இவ்வபிலாசைகளை உறுதிப்படுத்தும் வண்ணம் நாம் இத் தேர்தலில் செயற்படுவோம் என உறுதியளிக்கிறேன்.

கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் அனைவரும் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றிகொள்ளச் செய்வதன் மூலம் இதன் பெறுபேறுகளை எதிர்காலத்தில் பூரணமாக அனுபவிக்க முடியும். எனவே, காத்தான்குடி முஸ்லிம்கள் அனைவரும் இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்விடயத்தில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனம் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர்அலி, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்படப் பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com