Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பொலிஸ்காரர் சாட்சியம்

யோ.நிமல்ராஜ்

`காந்தி சிலையடியில் வெடிச்சத்தமும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி சவாஹிர் தொலைபேசி மூலம் கூறியதாக தனது சாட்சியத்தின் போது திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம்திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களின் மரணம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவால் எடுத்துக் கொள்ளப்பட்டபோது சாட்சியம் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது சாட்சியத்தின் போதும் குறுக்கு விசாரணைகளின் போதும் அவர் மேலும் தெரிவிக்கையில்;

"நான் 1968 ஆம் ஆண்டில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் 2006 ஜனவரி முதலாம் திகதி பொலிஸ் அத்தியட்சராகப் பதவி உயர்த்தப்பட்டு அன்றுமுதல் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தேன்.

துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒருமாதமும் பத்து நாட்களும் கடமையாற்றிய நிலையில் குருநாகல் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றலாகிச் சென்றேன்.

எனது குடும்பம் குருநாகலில் வசிப்பதாலும் எனது வயது முதிர்ச்சி அடிப்படையிலுமே நான் குருநாகல் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டேன்.

நான் திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது அந்நிலையப் பொறுப்பதிகாரியாக ஜனக மாலப்பெரும என்பவர் கடமையில் இருந்த அதேசமயம் 2 அத்தியட்சர்களும் நான்கு உப அத்தியட்சர்களும் இருந்தார்கள்.

சம்பவம் நடைபெற்ற ஜனவரி இரண்டாம் திகதி 2006 ஆம் ஆண்டு சவாஹிர் தான் பதில் பொறுப்பதிகாரியாக இருந்தார்.

அன்றைய தினம் நீதிமன்ற வேலைகளின் நிமித்தம் நான் மூதூருக்குச் சென்றுவிட்டு மாலை ஐந்து மணிக்குத்தான் பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பினேன்.

இந்நிலையில் அன்று இரவு 11.45 மணியளவில் நான் எமது விடுதியில் இருந்த சமயம் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் காந்திசிலையடிச் சம்பவம் தொடர்பாக அறிந்து கெண்டேன்.

மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இரு இளைஞர்களினதும் வாக்கு மூலத்தைப் பெறும்படி உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் இரவு 12.15 மணியளவில் திருகோணமலை மருத்துவமனைக்குச் சென்றேன்.

அங்கு காயமடைந்த இருவரிடமும் தாய், தந்தையிடமும் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டேன்.

மறுநாள் காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்ட கடற்படையினரிடம் விசாரணை செய்வதற்காக கடற்படை முகாமிற்குச் சென்று அச்சமயம் கடமையில் இருந்தவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்து கொண்டேன்.

மேலும் சவாஹிரின் உத்தரவின் பேரிலேயே இவ்விசாரணைகளை நான் மேற்கொண்டேன்.

அத்துடன் காந்திசிலையடியில் வெடிச்சத்தமும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாகவும் சவாஹிர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கடற்படைமுகாமில் விசாரணைகள் மேற்கொண்ட பொழுது கடற்படையினரின் சோதனைச் சாவடிகள் எங்கு உள்ளதென்பதையும் யார் யார் கடமையில் இருந்தனர் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இவ்விசாரணைகளின் போது என்னுடன் துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் ஒன்றரை வருடமாகப் பணியாற்றும் கருணாசேன என்பவரும் உடனிருந்தார். அதன்படி அன்றையதினம் மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை கடமையில் ஈடுபட்ட 20 கடற்படையினரின் குழுவுக்கு சூரசிங்க என்பவரே அணித் தலைவராக இருந்தார்.

அக்குழுவில் இந்திக ருவான், புஷ்பகுமார உள்ளிட்ட சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஏழுபேரின் துப்பாக்கிகளையும் பரிசோதித்தேன்.

ரி.56, ரி.81, ரி.83 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏழுபேரின் துப்பாக்கிகள் என்னால் பரிசோதிக்கப்பட்டு அவை குற்றப்புலன் விசாரணை அமைப்பிடமும் ஒப்படைக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இத்துடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமர்வில் இவரது சாட்சியம் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com