Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* பஷீர் சேகுதாவூத்

எம்.ஏ.எம்.நிலாம்

பல்வேறு வியூகங்களின் அடிப்படையிலேயே ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்ததாக முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான பஷீர்சேகுதாவூத் ஏறாவூரில் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர், ஏறாவூரில் அவருக்கு மக்களால் அளிக்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது;

எங்களால் உணர்ச்சி பூர்வமாகவும் முடிவெடுக்க முடியும். அறிவுபூர்வமாகவும் முடிவெடுக்க முடியும். உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்படுகின்ற முடிவு தான் நாம் மரச் சின்னத்தில் தனித்து நின்று முகம் கொடுப்பதென்பது அந்த உணர்ச்சிபூர்வமான முடிவினால் கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்ய நினைக்கின்ற அரசாங்கத்தினதும் அதனுடன் இணைந்துள்ள கூட்டத்தினதும் திட்டங்களை முறியடிக்க முடியாது.

இதனை உணர்ந்ததன் அடிப்படையில் அறிவுபூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுதான், இதற்கு எதிராக இன்னுமொரு பலம் பொருந்திய பெரிய கட்சியோடு கூட்டிணைந்து அதாவது அந்தப் பெரிய கட்சி கிழக்கு மாகாணத்தில் சிறிய ஆதரவைக் கொண்டிருக்கின்ற கட்சி என்ற அடிப்படையிலே அதனோடு வருகின்ற கூட்டிலே முஸ்லிம் காங்கிரஸ் பாரிய சக்தியாகிய மிளிர முடியும் என்ற நம்பிக்கையிலே அதனைக் கட்டுப்படுத்துகின்ற, எதிர்வரும் காலத்தில் கிடைக்கின்ற அரசியல் அதிகாரத்திலே பெரும் பங்கை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள முடியுமென்ற கணக்கீட்டின் அடிப்படையிலே தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த நாட்டில் பழம் பெரும் கட்சி, பலம் பொருந்திய கட்சி. ஆனால், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் மாபெரும் சக்தி இந்த இரண்டு பலத்தையும் ஒன்றுபடுத்திக் களமிறங்கியிருக்கின்றோம்.

எனவேதான் இந்தக் கூட்டுக்குத் தேவையான அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் பல வியூகங்களை அடிப்படையாகக் கொண்டு தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றோம்.

இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை வென்றெடுப்பதில் நாம் உறுதியான நிலைப்பாட்டுடன் போராட்டக் களத்தில் குதித்திருக்கின்றோம்.

எமது இணைப்பு ஆளும் தரப்புக்கு பலத்த சவாலாக அமைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் பஷீர்சேகுதாவூத் தமதுரையில் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com