அண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின்படி அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் பலர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய மாணவனான எம்.கே.எம். பஸ்லிம் 8 ஏ, 1 பி, 1 சி சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை ஸாஹிரா மகா வித்தியாலய மாணவனான எஸ்.எம்.மாஹிம் 8ஏ, 2பி சித்திகளையும் பெற்றுள்ளார். இதே பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளான எஸ்.ஹில்மியா 8ஏ, 1பி, 1 எஸ் என்ற வகையிலும் எஸ்.கஜனி 7 ஏ, 2பி, 1 சி என்ற வகையிலும் பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
இரு பாடசாலைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பல மாணவர்கள் பெற்றுள்ள போதிலும் தோற்றிய மாணவர் தொகையில் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்ற மாணவர்களின் வீதம் குறைவாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.