அண்மையில் வெளியிடப்பட்ட 2007 க.பொ.த. சாதாரண தரப்பத்திரப் பரீட்சை பெறுபேறுகளின்படி திருகோணமலை ஷ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய 107 மாணவிகளில் 12 பேர் பத்துப் பாடங்களில் `ஏ' சித்தி பெற்று திருகோணமலை மாவட்டத்தில் மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் 12 மாணவியரில் ஒருவரான டிரஞ்சலா தேவி பத்மநாதன் அகில இலங்கை ரீதியான வகைப்படுத்தலில் 5 ஆவது இடத்தைச் சுவீகரித்துள்ளார். 10 ஏ பெற்ற ஏனைய மாணவியரின் பெயர்கள் வருமாறு: டிக்சலாதேவி பத்மநாதன், பிரித்திகா பேரானந்தம், ஹில்மியா மவுறூப் றசானா முகமட் செரிவ், றிகானா முகமட் கலாம், இனியாள் பேராசிரியன், ஜெயப்பிரண்யா ஆறுமுகம், நிவேதா பரசுபாணி, கருணலதா நடராசா, கிஷாந்தி நடராஜபிள்ளை, சுஜித்தா ரவீந்திரன்.
09 `ஏ' சித்திகளைப் பெற்ற ஒன்பது மாணவிகளின் பெயர்கள் வருமாறு:
ரஜீந்தினி ராஜரட்னம், அனுஷா கலாதரன், ஷரினி சுவேந்திரன், இனியா ஷ்ரீஸ்கந்தராஜா, பவித்திரா யோகராஜா, ஷாலினி மகேந்திரராஜா, மதுரிகா ரவீந்திரன், யசோபிரியா ராமமூர்த்தி, தர்ஷாயினி ரவீந்திரன்.
71 மாணவிகள் தமிழ்மொழியிலும் 55 பேர் கணிதத்திலும், 28 பேர் விஞ்ஞானத்திலும், 49 பேர் சமூகக்கல்வியிலும், 45 பேர் ஆங்கிலத்திலும் `ஏ' சித்திகளைப் பெற்றனர். கடந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாடத்திற்கு தோற்றிய 30 மாணவிகளில் 23 பேர் `ஏ' சித்திகளைப் பெற்றனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 107 மாணவிகளில் 103 பேர் க.பொ.த. உயர்தர வகுப்பில் சேர்ந்து கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். ஷ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி திருமலை மாவட்டத்தில் முதல் தடவையாக இச்சாதனையை நிலைநாட்டியிருப்பதாக கல்லூரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.