Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
[05 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம் நிலாம்

ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்குரிய பாதுகாப்பை மீளப்பெறுவது தொடர்பாக சட்ட மா அதிபர் சமர்ப்பித்த மனு தொடர்பில் புதிதாக தீர்ப்பெதனையும் வழங்குவதை உயர்நீதிமன்றம் நேற்றுத் தவிர்த்துக்கொண்டது.

இதனால் ரவூப் ஹக்கீமுக்குரிய பாதுகாப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்னர் வழங்கிய தீர்ப்பில் மாற்றமெதுவும் இல்லை.

இதேவேளை, பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா இம்மனு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்; ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமானால் ஹக்கீம் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்து நீதி பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்திருக்கின்றார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரவூப் ஹக்கீமும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கடந்த புதன்கிழமை தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜிநாமாச் செய்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் வியாழக்கிழமை அரசாங்கம் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் பொருட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தினூடாக உயர்நீதிமன்றத்தின் அனுமதியை கோருவதற்கு மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை ஆராய்வதற்கு பிரதம நீதியரசர் தலைமையிலான நீதிபதிகள் குழு நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்தது.

இந்த விசாரணையை அவதானிப்பதற்காக ரவூப் ஹக்கீம் தனது சட்டத்தரணிகள் சகிதம் நேற்று உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.

சட்டத்தரணி ஜி.ஜி.அருட்பிரகாசத்தின் அனுசரணையுடன் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் ஆஜராகி மேற்படி மனுத்தாக்கல் குறித்து பிரதம நீதியரசரிடம் ஆலோசனை கேட்டனர்.

இம்மனு தொடர்பில் உயர்நீதிமன்றம் எதனையும் தெரிவிக்காமல் தவிர்த்துள்ளது.

ஆனால், அரசாங்கம் ஹக்கீமின் பாதுகாப்பை குறைக்க அல்லது அகற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்து நீதியைக் கோர முடியுமெனவும் பிரதம நீதியரசர் குறிப்பிட்டிருக்கிறார்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com