Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* ஐ.தே.க. அரசிடம் கேள்வி

எம்.ஏ.எம்.நிலாம்

எந்தச் சட்டத்தின் அடிப்படையில் பிள்ளையான் குழுவுக்கு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதக் குழுக்களை நடமாடவிட்டு ஜனநாயக ரீதியில் நேர்மையான தேர்தலை கிழக்கு மக்களால் எதிர்பார்க்க முடியுமாவென்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அரசியலமைப்பு விதிகளை புறக்கணித்து சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்டு வருவதாகவும் ஐ.தே.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தி யாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு முன்னர் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்ட போதிலும் அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தவறிவிட்டது. அதேசமயம் கிழக்கின் இன்றைய பிரதான ஆயுதக் குழுவான பிள்ளையான் குழுவோடு கைகோர்த்துக் கொண்டு ஆளும் தரப்பு கிழக்குத் தேர்தலில் போட்டியிடுகின்றது. பொலிஸ், இராணுவப் படைகளுக்கு அப்பால் இன்னொரு ஆயுதக் குழு சட்டரீதியற்ற முறையில் செயற்பட அரசு துணை போயிருப்பதன் மூலம் நேர்மையான தேர்தலொன்று இடம்பெறுமாவென்ற பலத்த சந்தேகம் இன்று தோன்றியுள்ளது.

ஆயுதக் கலாசாரத்தினூடாக மாகாண அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மறைமுகமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல தகவல்கள் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி தேர்தல் நடத்தப்படுவதாக அரசு கூறுமானால் சட்டபூர்வமற்ற ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். அதனை மதிக்காமல் அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பிள்ளையான் குழு ஆயுதங்களுடன் நடமாடுவதற்கு எந்தச் சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸாரும் இராணுவம் உட்பட முப்படைகளும் மட்டுமே ஆயுதமேந்தும் அதிகாரம் பெற்றிருப்பவை. வேறு எவருக்கும் அனுமதியின்றி தன்னிச்சையாக ஆயுதங்களைப் பயன்படுத்தவோ ஆயுதங்களுடன் நடமாடவோ முடியாது. ஆனால், அரசு பிள்ளையான் குழுவை ஆயுதங்களுடன் நடமாடவிட்டிருப்பதன் மூலம் தேர்தலில் அடாவடித்தனங்களை கட்டவிழ்த்துவிடவும் வாக்குகளை அபகரிப்பதற்குமான மறைமுக நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

இத்தகைய முறைகேடான நடவடிக்கைகளுக்காகவே சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதை அரசு தாமதப்படுத்தி வருகின்றது. சுயாதீன தேர்தல் குழுவொன்று அமைக்கப்பட்டால் பொலிஸ், படைத்தரப்பு உட்பட அனைத்து விடயங்களையும் கட்டுப்படுத்தும் பூரண அதிகாரம் தேர்தல் ஆணையாளருக்கு கிட்டும் என்பதை நன்கு அறிந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இதனைத் தாமதப்படுத்தி வருகின்றார்" எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com