Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
[05 - April - 2008] [Font Size - A - A - A]
*ஐ.நா.சாசனம் மீறப்படுவதாக புலிகள் விசனம்

கிறிஸ்தவ மக்களின் புனிதத் தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது படையினர் கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு ஒரு போர்ப்பூமியாக மாற்றி வருவதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

போர் மரபுகளின் படியும் ஐ.நா. சாசனங்களுக்கு அமைவாகவும் போர் செய்யாது தவிர்க்கப்பட வேண்டிய இந்தப்பகுதி மீது எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி தனது இராணுவத்தை ஏவிவிட்டிருக்கும் இலங்கை அரசின் இச்செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இடம்பெயர்ந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் பாதுகாப்பிடமாக இருந்துவரும் மடு புனித ஆலயப்பகுதியைப் போர்க்களமாக மாற்றியுள்ள அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமானது.

1999 இல் மடு ஆலயப் பகுதிக்குள் நுழைந்த படைகள் தனது போர்த் தாங்கிகள் மூலம் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஆலய மண்டபத்துக்குள் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், முதியோர்கள் , பெண்கள் உட்பட 30 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இதேபோன்று கடந்த 29.02.2008 அன்று மடு புனித வளாகப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளிச் சிறார்களின் பேருந்து மீது படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பள்ளிச்சிறார்களும் பொதுமக்களுமாக 18 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்து வரும் படைகள் அந்த மக்கள் மீது மீண்டும் ஒரு அவலத்தை சுமத்தியுள்ளது. முன்னரைப்போன்று இப்போதும் மடு புனித தலப்பகுதியை ஒரு இராணுவ வலயமாக்க அரசு முனைகின்றது.

பௌத்த மக்களின் மன அமைதி குறித்தும் பௌத்த மத தலங்களின் புனிதம் குறித்தும் அக்கறை செலுத்தும் இலங்கை அரசு, ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்களின் அமைதியையும் புனிதத்தையும் புறந்தள்ளி விட்டு தனது இராணுவ நலனை முன்னிறுத்தி செயற்படுவதனைக் கண்டிக்க அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் முன் வர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com