Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
[06 - April - 2008] [Font Size - A - A - A]
யாழ்.குடாநாட்டில் கடந்த இரு வருடங்களில் 740 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இதுவரை 740 க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளது தெரியவருகிறது.

இதேநேரம், மேலும் பலர் காணாமல் போயுள்ள அதேநேரம், அது குறித்து குடும்பத்தவர்களோ அல்லது உறவினர்களோ மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை.

அச்சம் காரணமாகவே பலர் இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பலர் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை தத்தமது பகுதி பொலிஸ் நிலையங்களில் மட்டுமே பதிவு செய்துள்ளதால் காணாமல்போனோர் தொடர்பான உண்மையான எண்ணிக்கை, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் மிக அதிகமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான இரு வருட காலத்திலேயே இந்த 740 பேரும் காணாமல்போனதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், இவ்வருடம் முதல் மூன்று மாதத்தில் யாழ். குடாநாட்டில் 27 பேர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 50 பேர் கடத்தப்பட்டதும் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 46 பேர் காணாமல்போனதுமே இந்தப் பட்டியலில் அதிகூடியோர் காணாமல்போன காலப்பகுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 40 பேர் காணாமல் போனதே அந்த ஆண்டில் மிகக் கூடியோர் காணாமல்போனதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
12 ஆவது அகவையில் தினக்குரல்
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
`நிக்கொட்' பணிப்பாளர் சுட்டுக்கொலை
3 மாதங்களில் 400 படையினர் பலி; 800 பேர் படுகாயம் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை காணவில்லை
பாலமோட்டையில் படையினர் முன்னேற முயற்சி;முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் பிரிட்டன் பயணம்
இரு புதிய எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பர்
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
மீள்குடியேற்றத்தை முந்தும் அவசரத் தேர்தல்
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினர் புத்தளம் உள்ளூர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு மீட்பு
ஆற்றில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டது
கொச்சிக்கடையில் வர்த்தகர் கொலை
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
கம்பஹாவில் தேடுதல்; 9 சிங்களவர் கைது
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு
இந்திய அணி இனிங்ஸால் தோல்வி
உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி சாரதி பலி
மின்னல் தாக்கி தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com