Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
[06 - April - 2008] [Font Size - A - A - A]
* திறைசேரியில் பணம் இல்லை

திறைசேரியில் நிதியின்மையால் பண்டிகைக்கால முற்பணத்தை அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரித்து வழங்க முடியாதென அரசு அறிவித்துள்ளது.

அரசாங்க ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முற்பணம் 3 ஆயிரம் ரூபாவிலிருந்து 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

பொதுநிர்வாக அமைச்சில் 25 க்கும் மேற்பட்ட அரசதுறை தொழிற்சங்கங்களுக்கும், அமைச்சர் கரு ஜயசூரியவுக்குமிடையே நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதன்போது தொழிற்சங்கங்கள் தற்போது வாழ்க்கைச் செலவு பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் எனவே, பண்டிகைக்கால முற்பணம் அதிகரித்து வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

இம்முற்பணத்தை தவணை அடிப்படையில் பின்னர் அரசாங்க ஊழியர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியுமெனவும் எனவே, உடனடியாக 3 ஆயிரம் ரூபா பண்டிகை முற்பணத்தை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளன.

எனினும் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள அமைச்சர் திறைசேரியில் நிதியில்லை எனவும் அதனால், அரசாங்க ஊழியர்களின் பண்டிகை முற்பணத்தை அதிகரித்து வழங்க முடியாதெனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்க தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையிலிருந்து விரக்தியுடன் வெளியேறியதாகக் குறிப்பிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிடும் போது;

அதிகரித்த முற்பணம் வழங்குவதாக அரசு ஆரம்பத்தில் எமக்கு வாக்குறுதி வழங்கியபோதும் பின்னர் ஏமாற்றிவிட்டது. எமக்கு முற்பணம் வழங்கிவிட்டுப் பின்னர் மாதாந்தம் எமது சம்பளத்தில் அதனைக் கழித்து விடுமாறும் கூறினோம். இதனைக் கூட ஏற்காத அரசு புது வருடத்தை நெருக்கடிக்கு மத்தியில் கொண்டாட எம்மை நிர்ப்பந்தித்துள்ளது என்றார்.

Email this page Your Opinion Print this page
12 ஆவது அகவையில் தினக்குரல்
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
`நிக்கொட்' பணிப்பாளர் சுட்டுக்கொலை
3 மாதங்களில் 400 படையினர் பலி; 800 பேர் படுகாயம் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை காணவில்லை
பாலமோட்டையில் படையினர் முன்னேற முயற்சி;முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் பிரிட்டன் பயணம்
இரு புதிய எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பர்
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
மீள்குடியேற்றத்தை முந்தும் அவசரத் தேர்தல்
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினர் புத்தளம் உள்ளூர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு மீட்பு
ஆற்றில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டது
கொச்சிக்கடையில் வர்த்தகர் கொலை
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
கம்பஹாவில் தேடுதல்; 9 சிங்களவர் கைது
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு
இந்திய அணி இனிங்ஸால் தோல்வி
உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி சாரதி பலி
மின்னல் தாக்கி தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com