வவுனியா பாலமோட்டை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நண்பகல் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை நண் பகல் 11.45 மணியளவில் பலத்த ஷெல்தாக்குதலுடன் பெருமளவு படையினர் இந்த முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.
இதையடுத்து விடுதலைப் புலிகளும் பலத்த பதில் தாக்குதலை மேற்கொள்ளவே கடும் மோதல் வெடித்தது.
இதையடுத்து படையினர் தங்களுக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளை நோக்கி பின்வாங்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலில் தங்கள் தரப்பில் எதுவித சேதங்களும் ஏற்படவில்லையெனவும் படையினர் தொடர்ந்து கடும் ஷெல் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.