பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிகமாக 2 ஆயிரம் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் புதுவருட பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி பிரயாணங்கள் மேற்கொள்வதற்காகவே அதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 2 ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் திட்டம் ஆரம்பமாகுமெனவும் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் நடத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
புதுவருட பண்டிகைக்கு முன்னர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்தும், பண்டிகைக்கு பின்னர் கோட்டை ரயில் நிலையத்தை நோக்கியும் ரயில் சேவைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.