ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமையுடன் குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரவூப் ஹக்கீம் கடந்த வாரம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இவரது பாதுகாப்பை குறைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களமூடாக அரசு நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தது.
எனினும், இது குறித்து உயர் நீதிமன்றம் எந்தவிதத் தீர்ப்பையும் வழங்காத நிலையில் ஹக்கீமின் பாதுகாப்பு சனிக்கிழமை குறைக்கப்பட்டதுடன் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாகனமொன்றும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீமுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு அவரது சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி சில மணிநேரத்தில் ஹக்கீமின் பாதுகாப்புப் பிரிவிலிருந்து இரு பொலிஸ் சார்ஜன்ட்களும் ஒரு கான்ஸ்டபிளும் திரும்ப அழைக்கப்பட்டதுடன் பாதுகாப்பு வாகன மொன்றும் (BACK UP VEHICLE) திரும்பப் பெறப்பட்டுள்ளது.