Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
[09 - April - 2008] [Font Size - A - A - A]
* பிரதியமைச்சர் பைசல் முஸ்தபா

அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் நாம் முன்னிலை வகிக்க வேண்டுமென சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்தார்.

அண்மையில் தெல்தெனிய கல்வி வலயத்தைச் சேர்ந்த ஹிஜிராபுர முஸ்லிம் மகா வித்தியாலய புதிய கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;

இன்று கிழக்கு மாகாணத்திற்கு வெளியே கல்வியில் மிகப் பின் தங்கிய சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. காரணம் பல்கலைக்கழக அனுமதியில் 1.5 சதவீத மாணவர்களே பிரவேசிக்கின்றனர். இவர்களில் அநேகர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கிழக்கைத் தவிர்த்து பார்க்கும்போது ஒரு மிகச் சிறிய தொகையினரே முஸ்லிம்களில் பல்கலைக்கழகம் செல்கின்றனர். ஆனால், எமது இன விகிதாசாரம் 9.5 ற்கும் மேல் உள்ளது.

18 வயதை அடைந்ததும் அதிகமான முஸ்லிம்கள் கடவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் தேடிச் சென்று விடுகின்றனர். இது உடனடித் தேவையை நிறைவு செய்கின்றபோதும் சமூக ரீதியில் பாரிய இழப்பாகும். நாம் கல்வியைத் தேடுவதில் பின்னிற்கக் கூடாது.

எனது பாட்டன் செய்யத் முஹம்மத் முஸ்தபா ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் கல்வியைத் தேடியதன் காரணமாகவே இன்று மூன்றாவது தலைமுறையில் நானும் ஒரு சட்டத்தரணியாகவும், பிரதி அமைச்சராகவும் உயர்ந்துள்ளேன். எனது பாட்டன் கல்வியைத் தேடவில்லை என்றால் எனது தந்தையும், நானும் இன்னும் மடவளையில் அதேநிலையில் இருந்திருப்போம். இந்தளவு முன்னேற்றம் கண்டிருக்க மாட்டோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன,மத,பேதமற்று குரல் கொடுப்பவர். பாலஸ்தீனத்தின் மக்கள் படும் துன்பத்திற்காக குரல் கொடுத்தவர். இதனால் அவரது கரத்தைப் பலப்படுத்த முற்பட்டேன்.

ஐ.தே.கட்சியின் ஆட்சியில் இப்பகுதி அபிவிருத்தி காணவில்லை. இதன் காரணமாகவே பிரதேச சபைத் தேர்தலின்போது ஷ்ரீ.ல.சு.கட்சி சார்பாக போட்டியிட்ட எஸ்.உபைதுல்லாவை ஆதரித்தீர்கள். அவரது அயராத முயற்சி காரணமாக இன்று சுமார் 20 இலட்ச ரூபா செலவில் இவ்விரு மாடிக் கட்டிடத்தை கட்ட முடிந்துள்ளது.

எனக்கு வாக்களித்த மக்கள் எனக்கு முக்கியம். எனவே, அவர்களுக்கு என்னால் ஆன சேவையைச் செய்ய நான் தயாராக உள்ளேன் என்றார்.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com