கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று முதல் இந்த நஷ்டஈட்டை வழங்கி வருகின்றார்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சடங்கிற்கான செலவாக 12,000 ரூபாவும் காயமடைந்தோருக்கு 10,00 ரூபாவும் நேற்று வழங்கப்பட்டது.