பண்டாரவளையைச் சேர்ந்த கிறேக் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 600 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்குரிய ஊக்குவிப்புக் கொடுப்பனவு தொழிலாளர்களின் சம்பளத்துடன் சேர்க்கப்படாமையும், தேயிலைக் கொழுந்துகளை பறித்து போடும் தேயிலைக் கூடைகளுக்கு 250 ரூபா என்றஅடிப்படையில் தொழிலாளர்களின் சம்பளத்தில் கழிக்கப்பட்டதையும் ஆட் சேபித்தே, மேற்படித் தோட்டத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தோட்டதிற்குள் பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தமையையும் தொழிலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
எமக்கு ஏற்பட்டிருக்கும் தொழில் ரீதியிலான பிணக்குகளுக்கும் பொலிஸாரை தோட்டத்திற்குள் அழைக்கப் படுவதானது, தோட்ட நிருவாகத்தின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்துகின்றது.
இது போன்ற செயல்பாடுகளையும் ஆட்சேபிக்கின்றோமென்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு, தொழிலாளர்களுக்குரிய சம்பளம் நேற்றுக் காலை வழங்கப்படும் போதே ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் சம்பளத்துடன் சேர்க்கப்படாமையும் தேயிலைக் கொழுந்து கூடைகளுக்கு 250 ரூபா கழிக்கப்பட்டமையும் தொழிலாளர்களுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்தே அவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட நிருவாகத்தின் இச்செயல்பாடுகளைக் கண்டித்து தொழிலாளர்கள் தமது சம்பளத்தைப் பெறுவதையும் நிறுத்தியுள்ளனர். வேலை நிறுத்தமும் தொடர்கிறது.
இவ்வேலை நிறுத்தம் குறித்து, ஊவா மாகாண சபைஉறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகணப் பொறுப்பாளருமான அ.அரவிந்குமார், கிறேக் பெருந்தோட்ட முகாமையாளர் சீவலிமுதனாயக்காவுடன் தொடர்பு கொடுண்டுள்ளார்.
உடனடியாக இப் பிணக்கை தம்மால் தீர்க்க முடியாது என்று தோட்டக் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியே தீர்வினை எற்படுத்த வேண்டுமென்றும், தோட்ட முகாமையாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, மலையக மக்கள் முன்னணியின் தொழிலுறவு அதிகாரி பி.எஸ். தயானந்த பதுளை உதவித் தெரிவிக்கின்ற ஆணையாளரும் தொடர்பு கொண்டுள்ளார்.