Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
[09 - April - 2008] [Font Size - A - A - A]
* ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்

யோ.நிமல்ராஜ்

`நான் இச்சம்பவம் தொடர்பாக நடந்த உண்மைகளை மட்டுமே இந்த ஆணைக்குழு முன்னிலையில் கூறுகின்றேன். அத்துடன், இங்கு சென்று சாட்சி கூறும்படி எவரும் என்னை வற்புறுத்தவுமில்லையென மூதூரில் இயங்கிய அக்ஷன் பாம் நிறுவன பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சாட்சியம் வழங்கிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 ஆகஸ்ட் மாதம் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பதினேழு பணியாளர்கள் தொடர்பான விசாரணைகள் ஏழுபேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவால் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.

இதன்போது, இச்சம்பவத்தில் பலியான ஜெயசீலனின் சார்பில் சாட்சியமளித்த ஒருவரை இராணுவத் தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணி கோமின் தயாசிறி குறுக்கு விசாரணை செய்யும் போது சாட்சியத்தின் கூற்றுகள் ஒன்றுக்குப்பின் முரணானவையாக இருக்கின்றதெனவும் சாட்சி தெளிவற்ற நிலையில் இருப்பதாகவும் கூறியபோதே சாட்சி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாட்சி மேலும் தெரிவிக்கையில்;

ஜெயசீலனை 2006 ஜூலை மாதம் 31 ஆம் திததியே நான் இறுதியாக சந்தித்தேன்.

அதற்குப் பின்னர் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. 2006 ஆகஸ்ட் முதலாம் திகதியே மூதூரில் மோதல்கள் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், ஜெயசீலன் மூதூரிலேயே தங்கி இருந்தார். 2006 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நான்காம் திகதி வரை அவர் எமது குடும்பத்தாருடன் தொலைபேசித் தொடர்பினை மேற்கொண்டிருந்தார்.

கடந்த 2006 ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூதூரில் மோதல்கள் ஆரம்பித்துவிட்டதை வெடிச்சத்தங்கள், ஷெல் வீச்சுகள் மூலமும் அறியக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில், 2006 ஆகஸ்ட் நான்காம் திகதி காலை தொலைபேசி மூலம் கதைத்த ஜெயசீலன் தனது அலுவலகத்தைச் சுற்றிய பிரதேசங்களில் இராணுவம் நிற்பதாகவும் தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் திரும்பி வருவதாகவும்தான் கூறினார்.

இவை அனைத்தையும் நான் எனது வாக்கு மூலத்தில் ஏற்கனவே கூறியிருந்தேன். நான் வழங்கிய வாக்கு மூலங்களில் இவை பதிவு செய்யப்பட்டனவா இல்லையா என்பது தொடர்பாக எனக்குத் தெரியாது.

வாக்கு மூலங்களில் நான் வாசிக்காமலேயே ஒப்பமிட்டேன்.

நான் எச்சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவர்களைச் படுகொலை செய்ததெனக் கூறவில்லை. அவர்களை குற்றஞ்சாட்டவும் இல்லை.

நான்காம் திகதி ஜெயசீலன் கூறிய விடயங்கள் வாக்கு மூலங்களில் இடம்பெறாமை குறித்து எனக்குத் தெரியாது.

மேலும், மாவிலாறு பாலம் மூடப்பட்டமை தொடர்பாகவும் திறக்கப்பட்டமை தொடர்பாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அது யாரால் மூடப்பட்டது, எவ்வாறு திறக்கப்பட்டது, எப்போது திறக்கப்பட்டது போன்ற விடயங்கள் எனக்குத் தெரியாது.

அத்துடன் காமினி என்பவர் பற்றி இராணுவ தரப்புச் சட்டத்தரணி மேலும் வினவிய போது, அவர் எனது சக ஊழியர் என்றுதான் எனக்குத் தெரியுமென சாட்சி கூறினார்.

மேலும், நான் இச்சம்பவம் தொடர்பில் நடந்த விடயங்களைக் கூறுவதற்காகவே இங்கு வந்துள்ளேன். எவருடைய வற்புறுத்தலின் அடிப்படையில் இங்குவரவில்லையென தெரிவித்தார்.

இதேவேளை, இராணுவ தரப்புச் சட்டத்தரணியால் பொங்கு தமிழ் நிகழ்வு பற்றியும் மாவிலாறு பாலம் தொடர்பாகவும் காமினி என்ற சக ஊழியர் பற்றியும் சாட்சியை கேள்விகள் கேட்க முற்பட்டபோது, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் நிசங்க உடலாகம அதற்கு அனுமதி வழங்கவில்லை.

அத்துடன், சாட்சியை திரும்பத்திரும்ப ஒரே கேள்விகளையும் இச்சம்பவத்துடன் தொடர்பற்ற விடயங்களைக் கேட்கவேண்டாமெனவும் ஆணைக்குழுவின் தலைவரால் உத்தரவிடப்பட்டது.

இச்சாட்சியின் சாட்சியம் நேற்றைய தினத்துடன் நிறைவு பெற்றது. இப்படுகொலை தொடர்பான விசாரணைகள் திரும்பவும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறுமென்றும் இன்னும் சிலர் இவ்விடயம் தொடர்பாக சாட்சியம் வழங்கவுள்ளனரென்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்குழு தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com