புகைப்பிடித்தலால் இலங்கையில் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணமடைகின்றனர். இவர்களில் 20 ஆயிரம் பேர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று மது, புகையிலை கட்டுப்பாட்டு அதிகார சபைத் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.
கிரியெல்ல சித்தார்த்த இளைஞர் சங்கத்தின் வருடாந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது;
எமது நாட்டின் சுதந்திரத்திற்காக பல அமைப்புகள் தொண்டாற்றியுள்ளன. இவற்றிலிருந்து தேசியத் தலைவர்கள் உருவாகினர். அரச, தனியார் துறைகளில் மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனைத் தடை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.