* அங்கிலிக்கன் ஆயர் டுலிப் டி சிக்கேரா
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் மெய்வல்லுநர்கள், தேசிய மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் லக்ஸ்மன் டீ சில்வா மற்றும் சில பாதுகாப்புப் படையினர் ஆகியோரின் படுமோசமான கொலை எதுவித பாரபட்சமுமின்றி தனிநலன் கருதாமல் உயர்ந்த மனதுள் மக்களால் கண்டிக்கப்படவேண்டும் என அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் அதி.வண.டுலிப் டி சிக்கேரா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சி சமூகத்தை பயங்கரமாகச் சிதறடிக்கும் முறையில் முடிவடைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட யாவருக்கும் எமது திரு அவையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கூட்டொருமையும் தெரிவிக்கின்றேன். துயருறும் பெற்றோர், துணைவர்கள், பிள்ளைகள், அனைவருக்கும் எமது மன்றாடல்களை எமது திரு அவை உறுதி செய்கிறது. ஆறுதலளிக்கும் கடவுள் உங்கள் உடைந்த நிலையைக் குணப் படுத்தி அமைதியால் உங்களை நிரப்பட்டும்.
இது விடுதலைப் புலிகளின் செயல் போல் தோன்றுகின்றது. இது டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் இளம் பாடசாலை விளையாட்டு வீரர்கள் அநேகர் கொலை செய்யப்பட்ட கோட்டை புகையிரத நிலைய குண்டு வெடிப்பிற்கு ஒத்ததாக உள்ளது. எங்காகிலும் குற்றமில்லாதவரின் படுகொலைகள் நியாயமான எந்த நோக்கத்திற்கும் நன்மை கிடைக்காது. அத்துடன் இலங்கையர்களின் பெருந்தன்மை. அமைதிக்கான எந்த செயல்பாலனங்களிலும் இதற்கு இடமில்லை.
இப்படியான வன்முறையைத் தூண்டும் செயல்கள் பயம், சந்தேகம், கோபம் இவற்றைப் பரப்புகின்றது. அவை எமது சமூகங்களிற்கிடையிலான பிளவை மேலும் அதிகரிக்கச் செய்து அமைதி உரையாடல்களுக்கு இருந்த தருணங்களை இல்லாமல் அகற்றிவிடும்.
ஆனால் அநேக வேளையில் வன்முறை மனுக்கல் நெருக்கடிகளின் அருவருப்பான மெய்யியல்புகளை எதிர்நோக்க வைத்து எமது உட்சிக்கல் நிறைந்த நெருக்கடியை சாத்வீக அடிப்படையில் செயல்படுத்துவதற்கான முடிவை எடுக்க எம்மைப் பலப்படுத்தும். இந்த இரண்டாவது விருப்பத் தேர்வை நாம் எமது தேசமாக உறுதியுடன் தைரியமாக வலியுறுத்த தவறிவிட்டோம் என்பது மிகவும் கவலை தரும் விடயம்.
இப்போதாவது அமைதி விரும்பும் எமது அன்பான நாட்டின் மக்கள் ஒரே குரலில் பேசி நேருக்கு நேர் மோதும் வன்முறையை உரையாடல், பேச்சுவார்த்தைக்கூடாக அகற்றுவோம். இது நிறைவேற்றப்படும் வரை அமைதி அபிவிருத்திக்கான ஜனநாயக அரசியல் செயல்பாடுகள் ஒரு போதும் பொருளியல் நிறைந்த சமூகத்தை உருவாக்காது.