Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, April 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
[09 - April - 2008] [Font Size - A - A - A]
* ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிப்பு

-எம்.ஏ.எம்.நிலாம்-

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் ஜே.வி.பி.யின் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண விமல் வீரவன்சவின் பாராளுமன்ற அறிக்கையை கடுமையாக சாடியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச கட்சியிலிருந்து தம்மை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் அவருக்கு ஆதரவான 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் மாலையில் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியது.

பாராளுமன்ற உறுப்பினர்களான பியசிறி விஜேநாயக்க, தேசிய பட்டியலில் எம்.பி.முஸம்மில் ஜயந்த சமரவீர, பிரியங்கர திசாநாயக்க, சமன்சிறி ஹேரத், பத்மா உதய சா ந்த, அச்சல ஜாகொட, தீபால் குணசேக்கர ,நிமல் பிரேமவன்ஸ, சுஜாதா அழககோன் ஆகியோருடன் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரணவும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பியசிறிவிஜேநாயக்க; ஜே.வி.பி. இன்று ஏகாதிபத்திய சதிக்குள் சிக்குண்டிருப்பதாகவும் கட்சிக்குள் ஒரு சிலர் கட்சிக்கொள்கைக்கு முரண்பட்டுச் செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் காட்டிக்கொடுக்கும் வேலையை ஆரம்பத்திருப்பதாகவும் சாடினார்.

ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஏகாதிபத்திய சக்திகளினதும் வலைக்குள் கட்சியின் உயர்மட்டத்தைச் சேர்ந்த சிலர் சிக்குண்டு விலை போயுள்ளதாகவும் அவர்களிடமிருந்து கட்சியையும் அதன் பின்னால் அணி திரண்டிருக்கும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தாங்கள் ஓரணியில் செயற்பட முடிவு செய்ததாகவும் தெரிவித்தனர்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ, உயர் மட்டத்துக்கோ அறிவிக்காமல் கட்சியில் எவரும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. விமல் வீரவன்ச மீது கட்சி ஒருதலைப் பட்சமாக முடுவெடுத்துள்ளது. இது பற்றிக் கட்சி உயர் பீடத்திடம் கேட்டபோதும் அவர்களில் எவரும் நியாயமான பதிலளிக்காமல் நழுவல் போக்கிலேயே கருத்து தெரிவித்தனர். கட்சி மேலிடம் உண்மையை மூடி மறைத்ததன் விளைவாகவே விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிட நேர்ந்தது. அவர் தமது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் அறிவித்தது நியாயபூர்வமானதாகவே நாம் காண்கிறோம்.

கட்சி மேலிடம் இவ்விவகாரத்தை பேசித்தீர்க்க முன்வந்தால் அதற்கு நாம் தயாராகவே உள்ளோம். ஜே.வி.பி.யை பாதுகாப்பதற்காக நாம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராகவிருக்கின்றோம் என்றும் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.

இதனிடையே குறுக்கிட்ட அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரணவீர பத்திரண, விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் அறிக்கை விடுத்தமை தவறானதென கண்டித்தார்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அவர் செயற்பட்டிருக்கின்றார். உள்ளே இருந்து பேசித் தீர்க்க வேண்டிய விடயத்தை பகிரங்கமாக்கி கட்சிக்கு அவப்பெயரை விமல் வீரவன்ச ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் தம்மனப் போக்கில் பேசத் தொடங்கினர். ஊடகவியலாளர்கள் தனித்தனியே கருத்துக்கூறுமாறு பல தடவைகள் வலியுறுத்தியபோதும் அதனை அவர்கள் செவிமடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தனர்.

கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கூட அவர்கள் நேரிடையாக பதிலளிக்காமல் சாக்குப்போக்காக கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் 11 பாராளுமன்ற உறுப்பினர்களாலும் உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்க முடியாத நிலையில் குழப்பகரமான விதத்தில் ஊடகவியலாளர்கள் மாநாடு முடிவுக்கு வந்தது.

Email this page Your Opinion Print this page
கிழக்கு தேர்தலின் பின் என்னை வெளியேற்ற கட்சி தீர்மானம் சூழ்ச்சிகளுக்கு அடிபணியேன்; தாயகத்திற்காக போராடுவேன்
வீரவன்ச தலைமையில் 11 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தனித்து இயங்க முடிவு
தம்மிக கித்துல்கொட நியமன விவகாரம் பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளி
11 ஜே.வி.பி எம்.பி.களுக்கும் எதிராக சட்டநடவடிக்கை
அரசியலமைப்புக்குட்பட்டதே கித்துல்கொடவின் நியமனம் சபாநாயகர் அறிவிப்பு; ஒத்துழைக்கமாட்டோம் என்கிறார் ரணில்
ஜெயராஜ் படுகொலை தொடர்பாக 75 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை
இயற்கை அனர்த்தத்தை தவிர எக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படாது; ஆணையாளர் தெரிவிப்பு
வாழைச்சேனையில் இளைஞன் குத்திக்கொலை
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
படுகொலை சம்பவம் தொடர்பாக மேலதிக விபரத்தை அன்றிரவு நான் அறிந்திருக்கவில்லை
`மும்மொழி பேசும் ஆற்றல் மிக்க அரசியல் தலைவர் அமரர் ஜெயராஜ்'
இடி, மின்னல் தாக்குதலால் இறப்பவர்கள் தொகை அடுத்த மாதம் அதிகரிக்கலாம்
அமைச்சரின் மறைவினால் கட்டானயில் பாதுகாப்பு
பேச்சுவார்த்தை மூலம் வன்முறையை அகற்றும்வரை ஜனநாயக அரசியல் செயற்பாடுகள் உருவாகாது
வவுனியா ஆஸ்பத்திரியில் 4 புலிகளின் சடலங்கள்
பாராளுமன்றத்தில் ஜெயராஜுக்கு அனுதாபம்
மலையகத்தின் பல்வேறு தொழிற்சங்கங்கள் மேதின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு
சுதந்திரக் கட்சிக்கு பாரிய இழப்பு
புகைப்பிடித்தலால் வருடாந்தம் 23 ஆயிரம் பேர் மரணம்
யாழ்.குடா நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை
கிழக்குத் தேர்தலில் 1,072 வாக்குச்சாவடிகள்
அநுராதபுரம் வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு
`நான் பொய்ச்சாட்சியம் வழங்க வரவில்லை நடந்த உண்மைகளை கூறவே வந்தேன்'
நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை கண்டித்து கிறேக் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமுதினி படகுச்சேவை மீண்டும் இடைநிறுத்தம்
தற்கொலைத் தாக்குதலில் பலியானோர் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நஷ்டஈடு
இலங்கை அகதிகளுடன் சென்ற 2 ஈரானியரிடம் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணை
வெள்ளைவான் ஆயுதபாணிகளால் குடும்பஸ்தர் கடத்தப்பட்டார்
அடிப்படை வசதிகளைவிட கல்வி வசதிகளை அபிவிருத்தி செய்வதில் முன்னிற்க வேண்டும்
யாழ்.குடாநாட்டில் மீண்டும் பாதீனியம் செடி பரவும் அபாயம்
கறிற்றாஸ் ஏற்பாட்டில் 45 உளவள பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்
இன்று திருமலையில் ஷ்ரீ சண்முகா மாணவிகளுக்கு பாராட்டு விழா; ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com