பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஆப்கானிஸ்தான் எல்லையில் கடமைபுரியும் பிரிட்டன் துருப்புகளை சந்திப்பதற்காக இரகசிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது தந்தை இளவரசர் சார்ள்ஸ் மற்றும் பேத்தியாரான மகாராணி எலிசபெத் ஆகியோரின் அனுமதியுடனேயே இளவரசர் வில்லியம் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஆப்கானின் எல்லையிலுள்ள விமானப்படைத்தளத்தில் அங்குள்ள படையினருடன் மூன்று மணித்தியாலமளவிலான சந்திப்பொன்றை இளவரசர் வில்லியம் மேற்கொண்டுள்ளார்.
இளவரசரின் இந்த இரகசியப் பயணம் தொடர்பாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில்;
ஆப்கானிஸ்தானின் எல்லையில் கடமைபுரியும் பிரிட்டன் விமானப் படையினரின் போர் நடவடிக்கைகளில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் முகமாகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அத்துடன் இளவரசரின் இவ் இரகசியப் பயணமானது எந்தவிதமான தடையுமின்றி நிறைவடைந்துள்ளதெனத் தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாண்டின் ஆரம்பத்தில் இளவரசரின் சகோதரர் ஹரியும் பத்து வாரங்களுக்கு ேமலாக ஆப்கானின் எல்லைப் பிரதேசத்திலுள்ள ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள பிரிட்டன் படையினருடன் பணிபுரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது பயணம் மிகமிக இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், இவர் பயணம் மேற்கொண்ட சிறிது நேரத்தின் பின்னர் இவரது பயணம் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாலேயே இவரது நேரம் சுருக்கப்பட்டு இளவரசர் வில்லியம் உடனடியாக பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.