நாடுமுழுவதுமுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருதுவழங்கிக் கௌரவிக்க ஐந்து ஊடக அமைப்புகளும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமும் முன்னேற்பாடுகளைச் செய்துள்ளன.
மக்கள் சேவை ஊடகம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான ஊடகவிருது 2008 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
சிறந்த ஊடக செயற்பாட்டுக்காக சகிப்புத் தன்மை மற்றும் மக்கள் சேவைக்கான பெறுமதியை விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
வடக்கு, வடமத்திய, ஊவா, தெற்கு, கிழக்கு, மத்திய, வடமேல், சப்ரகமுவ ஆகிய ஒன்பது மாகாணங்களிலும் பிரதேச செய்தியாளராக இருப்பவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாகாண மட்டத்தில் வழங்கப்படும் மக்கள் சேவை ஊடகப் பெறுமதியை விருத்தி செய்வதற்கான விருது முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே 15,000, 10,000, 7,500 வீதம் பணப் பரிசில்கள் வழங்கப்படும். சகிப்புத் தன்மைக்கான விருதுக்கு பதிலாக பிரதேச மட்டத்தில் 10,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும். மாகாண மட்டத்தில் பரிசளிப்பு விழா நடைபெறும்.
தேசிய விருது
ஒன்பது மாகாணங்களிலும் வெற்றி பெற்றோர் மத்தியில் சிறந்த அச்சு / வானொலி / தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் ஆகிய ஊடகங்களில் தெரிவுசெய்யப்படும் சிறந்த ஆக்கங்களுக்கு கொழும்பில் நடைபெறவுள்ள பிரதான விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும். மக்கள் சேவைக்கான விருதுடன் 75,000 ரூபா பணப் பரிசும், இரண்டாம் இடத்தை பெறுபவருக்கு 50,000 ரூபா பணப்பரிசும், மூன்றாம் இடத்தை பெறுபவருக்கு 30,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். சகிப்புத்தன்மைக்கான தேசிய விருதுக்காக 40,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
விண்ணப்பித்தல்
முறையான ஊடக செயற்பாட்டுக்காக சகிப்புத்தன்மை மற்றும் மக்கள் சேவை பெறுமதியை விருத்தி செய்தல் ஆகிய விருதுக்காக பிரதேச மட்டத்தில் செயற்படும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளலாம். மக்கள் சேவை ஊடக விருது மற்றும் சகிப்புத் தன்மைக்கான விருது ஆகியவற்றுக்காக தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு தனித்தனியாக விண்ணப்பிக்காவிடின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை போட்டிக்கு அனுப்பும்போது அவற்றை CD யில் பதிவு செய்து அனுப்பவேண்டும். இந்த விருதுக்காக விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கும் ஊடகவியலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்கவேண்டும். சகல விண்ணப்பங்களுடனும் நீங்கள் சேவையாற்றும் நிறுவனத்தால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவன அடையாள அட்டை அல்லது அரச தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளின் பிரதிகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
குறிப்பிட்ட தினத்திற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர் 2007 அக்டோபர் 2 ஆம் திகதி முதல் 2008 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அச்சு / வானொலி / தொலைக்காட்சி அல்லது இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட மேற்கண்ட தரத்துடனான செய்தி அறிக்கைகள், செய்திக் கட்டுரைகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் மூன்றை மாத்திரம் அனுப்பி வைக்கலாம். போட்டிக்கு முன்வைக்கும் ஆக்கங்கள் தொடர்பாக முதலாவது திருத்தம் மற்றும் பின்னணி அறிக்கைகளின் பிரதியொன்றையும் விண்ணப்பங்களுடன் அனுப்பி வைக்க வேண்டுமென்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
விருதுக்காக முன்வைக்க எதிர்பார்க்கும் மூன்று ஆக்கங்களுடன் மூன்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து 2008 செப்டெம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும்படி கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
இணைப்பாளர், மக்கள் சேவை ஊடக விருது 2008 1இ 1/1, 28 ஆவது ஒழுங்கை, ஃப்ளவர் வீதி, கொழும்பு - 03 , தொலைபேசி : 060 2144140, ஈமெயில் : psjaward2008 gmail.com