Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
[01 - May - 2008] [Font Size - A - A - A]
முஸ்லிம் மக்களின் நலனையும் தனித்துவத்தையும் வலியுறுத்தி, "முஸ்லிம் விடுதலை முன்னணி" எனும் பெயரிலான அரசியல் கட்சியொன்று கிழக்கு மாகாண சபை தேர்தலில் களமிறங்கியுள்ளது. முஸ்லிம் சமூகத்துக்காக உள்ளூரிலும் வெளிநாட்டிலும், மேற்கொண்ட நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் பற்றி குறிப்பிட்டுள்ள இக்கட்சி தாம் வெற்றிபெறுவதன் மூலம், முஸ்லிம் மக்களின் விமோசனத்துக்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வாக்குறுதியளித்து துண்டுப்பிரசுரமொன்றையும் வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்களின் தனித்துவத்தை கவனத்தில் கொண்டு இத்தேர்தலில் தனித்துவமான கட்சியாக தாம் செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ள இக்கட்சி, இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் தாம் ஆற்றவுள்ள பணிகள் குறித்து அதன் தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

நாங்கள் சர்வதேச ரீதியாக செயல்படுபவர்கள். எங்கள் சமூகத்துக்குள் ஏற்படும் பல பிரச்சினைகளை உலகளாவிய ரீதியில் கையாண்டு அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்துள்ளோம்.

"ஹலால் சட்டத்தை சட்டரீதியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னெடுத்தபோது மக்கள் விடுதலை முன்னணி அதனை எதிர்த்தது. இதனைக் கண்டித்து பல போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் எதிர்த்தோம். உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்படும் மத ரீதியான சமூகப் பிரச்சினைகளுக்கு கண்டன ஊர்வலம் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தோம். பலஸ்தீனப் பிரச்சினை, ஈராக் பிரச்சினைகளும் இதிலடங்கும். எனவே தான், இவ்விடுதலை முன்னணியை இலங்கை கிழக்கு மாகாணத்திற்கும் அறிமுகம் செய்து எங்களுக்கான முழு ஆதரவையும் பெற நினைத்துள்ளோம்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் எங்களது கட்சிக்கு குறிப்பிட்ட பகுதியையோ தொகுதியையோ கொண்டிராமல் மாவட்ட ரீதியான பரவலான வாக்குகளை எதிர்பார்க்கின்றோம். இதன்மூலம் எங்களுக்கு சிறுபான்மைக் கட்சி என்ற முறையில் ஒரு ஆசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு உங்களது வாக்குகள் உதவும் என நம்புகிறோம்.

இன்றைய கால கட்டத்தில் எங்களுக்கு பல அவசர தேவைகள் உள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிப் பாவனையால் சுபஹுக்கான பாங்கு சொல்வது பள்ளிவாயலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் பெறுவதற்கான தேவைப்பாடு மற்றும் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதை தடை செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை தடை செய்வதன் அவசியம் இதன்மூலம் குர்பான் போன்ற புனித கடமைகளை செய்வதன் சுதந்திரத்தை பேணுதல், பாரம்பரியமாக வாழ்ந்த எங்களது பூமியை அபகரிக்கும் சக்திகளை விரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமது பரம்பரையின் முன்னோடிகளுக்கு தமிழர்களால் வழங்கப்பட்ட மண்முனை, நொச்சிமுனை போன்ற எல்லைகளைக் கொண்டிருக்கும் எமது காணிகளை அடையாளம் கண்டு அதற்கான குடியேற்றங்களையும் அத்துமீறிக் குடியேறும் முறையற்ற குடியேற்றங்களையும் தடுத்து நிறுத்தல், தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பலப்படுத்தவும், பிளவுகள் ஏற்படுவதற்கான காரணிகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகள் எட்டுவதற்கான ஏற்பாடுகள், கைத்தொழில்களை ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளும் எமது பிரதான நோக்கங்களாக உள்ளன என அக்கட்சி தெரிவித்துள்ளது.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com