Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
*ஈ.பி.டி.பி. வேண்டுகோள்

"ஆராதனைக்குரிய தேவாலயங்களை ஆயுதங்கள் ஆட்சி செய்ய முடியாது . அந்த வகையில் ஆயுதங்களோடு நடமாடிய புலிகளின் பிடியிலிருந்து மடு தேவாலயத்தை மீட்டெடுத்ததுடன் நின்றுவிடாது அங்கு அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஈ.பி.டி.பி.வேண்டுகோள் விடுத்துள்ளது. மடுத் தேவாலயத்தை படையினர் கைப்பற்றியது தொடர்பாக மேற்கண்டவாறு தெரிவித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

தொடரும் படைநகர்வின் மூலம் மடுமாதா தேவாலயத்தை புலிகளிடம் இருந்து விடுவித்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். புனிதத் தலமான மடுத் தேவாலயம் யுத்த சேதங்கள் எதுவுமின்றி மீட்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இத்தகைய மக்களின் மன மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்கின்றோம்.

படை நடவடிக்கைகளுக்கு மத்தியில் திருக்கேதீஸ்வரர் ஆலயம் படையினரின் பூரண கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. அங்கு நடந்து முடிந்த உற்சவங்களில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு சுதந்திரமான வழிபாட்டில் ஈடுபடுவதற்கான சூழலையும் பாதுகாப்பையும் படையினர் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க விடயமாகும். இதுபோலவே படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் தோறும் சுதந்திரமான வழிபாட்டிற்கு உகந்த சூழலை படையினர் உருவாக்கியுள்ளனர்.

ஆகவே, படையினரால் மீட்கப்பட்ட மடுத் தேவாலயத்தின் சூழலையும் மக்களின் சுதந்திரமான வழிபாட்டிற்குரியதான புனிதப் பிரதேசமாக ஆக்குவதற்கும் வழிபடச் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமான கட்டாயக் கடமைகள் குறித்து கரிசனையோடு கருத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இதேவேளை, மடுமாதா சொரூபத்தை மக்களின் விருப்பங்களுக்கு மாறாக அங்கிருந்து புலிகள் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றிருப்பது மக்களின் ஆன்மீக உணர்வுகளை புண்படுத்தும் செயலாகும்.

மடுத் தேவாலயத்தில் மாதா சிலையினை மறுபடியும் புலிகள் தாமதமின்றி ஒப்படைப்பதே உரிய முறையாகும். கத்தோலிக்க ஆயர்கள் , வணபிதாக்கள் மட்டுமன்றி சர்வ மதத் தலைவர்களும் மனிதநேய அமைப்புகளும் மதஸ்தாபனங்களும் இது குறித்த அழுத்தங்களை எடுத்துச்செல்ல வேண்டியது பாரிய கடமையாகும்.

சகல மக்களும் விரும்பும் ஆன்மீக வெளிச்சங்களை திரைபோட்டு மறைக்கும் தடைகளை அகற்றி எமது மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com