Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
* மேதினச் செய்தியில் ரணில்

நீதியும், நியாயமும் மேலோங்கக் கூடியதான மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும், வறுமைக்கோட்டிலிருந்து உழைக்கும் வர்க்கத்தை மீட்டெடுப்பதற்கும் பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டுத் குரல் எழுப்ப வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

மேதினத்தையொட்டி அவர் விடுத்திருக்கும் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

உலகம் முழுவதும் வாழும் உழைக்கும் மக்களுக்கான உன்னத தினமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. வரலாற்றில் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்கள் மூலம் வென்றெடுக்கப்பட்டதே இந்த மேதினமாகும்.

என்னதான் விடுதலைப் போராட்டங்களை நடத்தினாலும் உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து இன்னல்களை எதிர்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களால் மீட்சி பெறுவதென்பது பகற்கனவு போன்றே உள்ளது.

இந்த நாட்டு மக்கள் இன்று முகம்கொடுக்கும் சவால்கள், நெருக்கடிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அவசரம் உருவாகியுள்ளது. உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்டப்பட வேண்டும்.

ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை இன்னமும் தனது கைப்பொம்மைகளாகவே வைத்திருக்க முயற்சிக்கின்றன. சுதந்திரம்,உரிமை பற்றியெல்லாம் என்னதான் பேசினாலும் அவை நடைமுறையாவதில் இன்னமும் கேள்விக்குறிதான் காணப்படுகிறது.

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாகவும், உயர்ந்த நிலையிலும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க நாம் ஒன்று பட்டுக் குரல் எழுப்ப வேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தின் உயர்சிக்காக துணை நின்று போராடவும், குரல் எழுப்பவும் ஐக்கிய தேசியக்கட்சியும், அதனோடு இணைந்த தொழிற்சங்கங்களும் தயாராகவுள்ளது என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

உழைக்கும் வர்க்கத்தின் விடிவுக்காக இந்த தொழிலாளர் தினத்தில் பிரார்த்தித்து நாட்டின் முதுகெலும்பான தொழிலாளர்களுக்கு தலை சாய்த்து வணக்கம் செலுத்துகின்றேன்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com