Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
[01 - May - 2008] [Font Size - A - A - A]
பயங்கரவாத சவாலை வெற்றி கொண்டு நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தினர் தம்மோடு ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தனது மேதினச் செய்தியில் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் அந்த மேதினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் பெருமையுடன் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இலங்கை வாழ் தொழிலாளர்களுக்கு எனது வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

மகிந்த சிந்தனை நிகழ்ச்சித் திட்டத்தைப் பலப்படுத்துவதனூடாக எமது நாட்டின் அபிவிருத்திக்கு எமது தொழிலாளர்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்பை நான் மிகவும் பாராட்டுவதோடு இது வளமான இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையையும் அளிக்கின்றது.

எமது தொழிலாளர்கள் நாட்டுக்கு பல அடைவுகளை ஈட்டித் தந்துள்ளனர். அந்த கௌரவத்தை தொழிலாளர்களுடன் நான் பகிர்ந்துகொள்ள முடியுமாக இருப்பது எனது அதிஷ்டமாகும். மக்களின் அபிலாஷைகளைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு சரியான பாதையில் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள எமது நடவடிக்கைகளினால் அவர்கள் கௌரவப்படுத்தப்படுகின்றனர் என நான் நம்புகிறேன்.

தொழிலாளர்கள் இன, மத, குல மற்றும் அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி ஐக்கியமாக இருப்பது நாட்டுக்குப் பெரும் சக்தியாகும். நாட்டில் சமாதானம் சீர்குலையும் போது தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளுமே அதிகம் அல்லல்படுகின்றனர். பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்து சமாதானத்தை முன்னெடுக்கும் சவாலை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு அவர்கள் அரசாங்கத்துடன் நடந்துகொள்வது இந்த விடயத்தை புரிந்து வைத்துள்ளமையே காட்டுகிறது. இது நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அவர்கள் வழங்கும் பாரிய உதவியாகும்.

இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் சுபிட்சத்தைக் கொண்டுவருவதற்கான கொள்கைகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. அதனாலேயே நாம் பொதுத்துறை ஊழியர்களைப் பலப்படுத்தும் அதேவேளை, தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளைக் காப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மக்கள் சார்பு அரசாங்கம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதனூடாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுத்தோம். நாம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி, நிலையான சமாதானத்தை அடைவதற்கான சவால்களுக்கு முகங்கொடுப்பதில் தொழில் புரியும் மக்களின் தொடரான ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கின்றேன். அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடிய புதியதோர் இலங்கையொன்றைக் கட்டியெழுப்புவதில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com