Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, May 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
[01 - May - 2008] [Font Size - A - A - A]
*திருமலையில் ரணில்

மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் இடம்பெற்றதொரு காட்சிதான் இன்று கிழக்கு மாகாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று, திருகோணமலை முற்ற வெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மேலும் தனது உரையில்,

பாண்டவர்கள் அதிகாரப் பகிர்வு கேட்டார்கள். நூறு சகோதரர்களுடன் ஆட்சி நடத்திய துரியோதனன் மறுத்தான்.

பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் துரியோதனாதியர்களைச் சந்தித்தனர், அப்போது கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

பதினெட்டு நாள் குருஷேத்திரப் போர் நடக்கிறது. பாண்டவர் வென்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நான் இத்துடன் ஒப்பிடுகிறேன்.

கிழக்கு மாகாணத்தை ஆயுதக் கலாசாரத்திலிருந்து விடுவிக்க வேண்டும். ஆயுத கலாசாரத்திற்கு நாம் அடிபணிய முடியாது. அச்சுறுத்தல், அடாவடித்தனங்களுக்குப் பயந்து தினமும் கப்பம் செலுத்தி வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது ஆட்சியாளருக்கு கலக்கத்தைக் கொடுத்துள்ளது. வங்குரோத்து நிலையை நோக்கிச் செல்லும் இவ்வரசு வாக்காளர்களை அச்சுறுத்தி வெற்றியீட்டலாம் என்று எண்ணுகிறது.

இலங்கையன் என்ற முறையில் இன, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதே எனது ஒரே நோக்கமாகும். ஆளுமை நிறைந்த தீர்வுத் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதன் மூலமே நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வர முடியும்.

இலங்கையில் கிழக்கு மாகாணம் ஒன்றில் மட்டுமே மூன்று இனங்களைச் சேர்ந்த மக்களும் சமமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். எனவே, கிழக்கு மாகாண மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வு நாட்டிலே வாழ்கின்ற அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு தீர்வாக அமையும். அவ்வாறான ஒரு தீர்வை இந்த அரசினால் முன்வைக்க முடியாது. ஆயுதமேந்திய குழுக்கள் அவற்றை ஒப்படைப்பார்களாயின் அவர்களை அரசியல் சக்தியாக அங்கீகரிக்க முடியும்" என கூறினார்.

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சின்ன மஹ்ரூப் பேசுகையில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டர் வசதி மறுக்கப்பட்ட நிலையில் தரைவழியாக திருமலை வந்து பிரசாரக் கூட்டங்களில் பங்குபற்றுகின்றார் எனக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் செய்து கொண்டுள்ள இந்த உடன்படிக்கை, கிழக்கு மாகாணத் தேர்தலுடன் நின்று விடும் ஒன்றல்ல; பாராளுமன்றத் தேர்தலிலும் இத்தேர்தல் கூட்டு நீடிக்கும் என்றும் சின்ன மஹ்ரூப் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
பணவீக்கம் 29.9%
மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம்
கிழக்கு மக்களை தவறாக வழிநடத்த ரணில், ஹக்கீம் தீவிர முயற்சி
நாட்டை பாதுகாக்க தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு ஜனாதிபதி அழைப்பு
மே தினத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு பேரணிகளை ஹெலிகள் கண்காணிக்கும்
ஐ.தே.க.முன்னாள் எம்.பி.வேலாயுதம் பிரசாரத்தில் ஈடுபட்டவேளை அச்சுறுத்தல்
தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றும் சட்டமூலத்திற்கு எதிராக மனு
இலங்கை தொடர்பாக ரொட்லியின் கருத்து குறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை
அக்கரைப்பற்றில் மு.கா. வேட்பாளர் மீது தாக்குதல்
கிழக்கில் தேர்தல் வன்முறை அதிகரிப்பு
அந்தமான் கடலில் 60 இலங்கை மீனவர் இந்திய கரையோர காவல்படையினரால் கைது
வடக்கை தமிழருக்கும் கிழக்கை முஸ்லிம்களுக்கும் தாரைவார்க்க பிரதான இருகட்சிகளும் முயற்சி
மன்னாரில் பல பகுதிகளிலும் கடும் சமர்
`மன்னார் மோதலில் ஏழு படையினர் பலி'
மணலாறில் பரஸ்பர ஷெல் தாக்குதல் குடும்பஸ்தர் பலி; ஒருவர் காயம்
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட முன்னாள் மாணவனே சுட்டுக்கொலை
`பிரபாகரன்' திரைப்பட விவகாரம் சென்னை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
நளினியை வெகுவிரைவில் விடுதலை செய்யக்கோரி மேல்நீதிமன்றில் மனு
ஷெல் காஸின் விலை 20 ரூபாவால் குறைப்பு
வவுனியாவில் ஐ.நா. பணியாளர் கைது
`உழைக்கும் மக்கள் எழுந்த தினத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்'
மே 8 இல் தேர்தல் ஒத்திவைப்பு மனு மீதான தீர்ப்பு
உழைக்கும் மக்களின் பலத்தை ஓரணியில் திரட்ட இந்தவருட மேதினம் முக்கியமானது
தொழிலாளரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும்
தேசத்தை வறுமைக்கோட்டிலிருந்து மீட்க உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும்
பரீட்சைக்கு தோற்றிய மாணவர் கவனத்திற்கு
விமானிகளுக்கு வருமானவரிக் குறைப்பு திருத்தச் சட்ட மூலம் உடனடியாக அமுல்
மனைவி, மகள்மாரை தாக்கியவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் தனியான அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டேன்
மண்சரிவு அபாயம் தோன்றியுள்ள பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள்
மலையகத் தமிழ் மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோட்டத் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடிமைத்தனமான கூட்டு ஒப்பந்தத்தை உடைத்தெறிவோம்
தொழிலாளர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் நாளே உண்மையான மே தினம்
தொழிலாளர் பலத்தை அதிகரிக்க இ.தொ.கா தலைமையில் ஒன்றுதிரள வேண்டும்
`பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் எமது மக்களை மீட்டெடுக்க மே தினத்தில் உறுதிபூணுவோம்'
சித்திரவதையிலிருந்து மக்களைக் காப்பாற்ற டாக்டர்கள்- சட்டத்தரணிகள் இணைந்து செயற்பட வேண்டும்
மடுதேவாலயத்தில் அனைத்து மக்களும் சுதந்திரமாக வழிபடக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்
திம்புல்வல பிரதேச தமிழ் மக்கள் அடையாள அட்டை பெறுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம்
கிழக்கு கோட்டையின் ஜனநாயக வாசல் தேர்தல் மூலமாக அகலத்திறந்துள்ளது
மீட்கப்பட்ட கிழக்கை பாதுகாப்பது அங்கு வாழும் மக்களின் பொறுப்பாகும்
முஸ்லிம் தேசத்துக்கென தனித்துவமாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள முஸ்லிம் விடுதலை முன்னணி
கிழக்கு மாகாண மக்கள் தேர்தலில் ரவூப் ஹக்கீமுக்கு பாடம் புகட்டுவர்
தமிழ் சமூகத்துக்கு ஒரு விமோசனத்தைப் பெறவே ஜனாதிபதியின் அரசுடன் இணைந்துள்ளோம்
பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு விருது ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் ஏற்பாடு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com