Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
[10 - May - 2008] [Font Size - A - A - A]
* மு.கா.முதன்மை வேட்பாளர் ஹசன் அலி

இந்த மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றி பெற்றால் கிழக்கில் ஒரு முஸ்லிம் மாகாணம் உருவாக்கப் படுவதையும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி உருவாவதையும் யாரும் தடுக்க முடியாது என்று அரச உயர்மட்டம் கூறியுள்ளது என்று எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.

சம்மாந்துறையில் பிரதேச சபை உறுப்பினர் சுபைர் தலைமையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான எம்.ரி. ஹசன்அலி தெரிவித்தார்.

பெருந்தொகையான மக்கள் நிறைந்திருந்த அக்கூட்டத்தில் ஹசன்அலி தொடர்ந்து உரையாற்றுகையில் ;

பெருந்தேசிய கடும்போக்கு இனவாதிகள் தமிழ்பேசும் மக்களுக்குரிய தீர்வுத்திட்டத்தை நிறைவேற்றாமல் இந்தத் தேர்தலைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் மூலம் தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்கு எத்தனிக்கிறது இனவாத அரசு. தமிழர்களையும் முஸ்லிம்களையும் கடும்போக்காளர்கள் மோதவிட்டாலும் தமிழ்பேசும் மக்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். பேரினவாதிகளையும் கடும் போக்காளர்களையும் அவர்கள் இனங்கண்டு வைத்திருக்கிறார்கள். அநீதிகளும் அதர்மங்களும் தொடர்வதை யாரும் விரும்பமாட்டார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் தமிழ்பேசும் மக்கள் பேரினவாதிகளுக்கு நிச்சயமாக உணர்த்துவார்கள்.

தமிழர்களும் , முஸ்லிம்களும் மோதினால் பகைமைக்கு அடிமையாகிவிட்டால் பேரினவாதம் அதில் குளிர்காயும். இருபது வருடங்களுக்கு முன் எமது தலைவர் அஷ்ரப் நிலத் தொடர்பற்ற முஸ்லிம்களை உள்ளடக்கிய முஸ்லிம் மாகாணத்தைத் தான் கோரினார். தமிழ், முஸ்லிம் உறவை மிகவும் இறுக்கமாகவும், நெருக்கமாகவும் பேணிவந்த அஷ்ரப் தமிழ்பேசுகின்ற மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான நோக்கங்களில் ஒன்று நாட்டின் சமாதானமும் இனங்களின் ஒற்றுமையுமாகும்.

குறிப்பாக சிறுபான்மையினங்களின் ஒற்றுமையில் தான் கிழக்கின் விடிவு தங்கியுள்ளது. அந்த விடிவை ஏற் படுத்த விடாமல் நீதிமன்றத்தின் துணையுடன் பேரினவாத சக்திகள் கிழக்கைப் பிரித்து தேர்தலை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அதர்மத்துக்கும், அநீதிகளுக்கும் அடக்குறைகளுக்கும் துணைபோன வரலாற்றை மாற்றுகின்ற மாபெரும் சக்தி வாக்காளர் தான்.

சமாதானத்தையும் அகிம்சையையும் நேசிக்கின்ற அதற்காகப் போராடி வருகின்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை நீங்கள் ஆதரிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்தால் தமிழ்பேசும் மக்களுக்குத் தாயகக் கோட்பாடு தேவையில்லை. அவர்கள் அரசாங்கத்தை நேசிக்கிறார்கள் என்று சர்வதேசத்துக்குச் சொல்லி விடுவார்கள். கிழக்கில் ஜனநாயகமும் , சமாதானமும் இருக்கின்றன என்று உலகம் நம்பிவிடும்.

ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த நாட்டின் மாபெரும் அரசியல் சக்தியை எதிர்வரும் 10 ஆம் திகதி நீங்கள் இன்னும் பலப்படுத்த வேண்டும். உங்கள் பலந்தான் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளம். இதை நீங்கள் இந்தத் தேர்தல் மூலம் உலகுக்கு உணர்த்த வேண்டும்.

இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகார அலகுடன் கூடிய பிரதேசங்கள் பிரித்துக் கொடுக்கக் கூடாது என்று பேரினவாத கடும்போக்குடைய கட்சிகள் கூறுகின்றன.

இந்த மண்ணைக் கடும் போக்காளர்களிடமிருந்து காப்பாற்றத்தான் நாங்கள் தேர்தல் களத்தில் எங்கள் உயிர்களையும் பதவிகளையும் துச்சமாக மதித்து இறங்கியுள்ளோம்.

ஐ.தே.கட்சி மிதவாதக் கட்சி சிறுபான்மையினரின் நிம்மதியையும் சமாதானத்தையும் விரும்புகிற கட்சி. அதிகார அலகுடன் கூடிய பிரதேசங்கள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையுடைய கட்சி ஐ.தே.கட்சி. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளையும் கொள்கைகளையும் ஐ.தே.கட்சி ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் ஐ.தே.கட்சியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. எனவே, தமிழ்பேசும் மக்கள் எங்கள் பலம், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எங்கள் வளம் என்றார்.

ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அன்சார் மௌலானா உட்பட பலரும் உரையாற்றினார்கள்.

Email this page Your Opinion Print this page
இலங்கை இனமோதலுக்கு போர் மூலம் தீர்வு இல்லை
நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
தேர்தல் கண்காணிப்பு குழுவில் அரசதரப்பினரின் பிரசன்னத்துக்கு ஹக்கீம் கடும் ஆட்சேபனை
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
சமூக சேவையாளர் சுட்டுக் கொலை
கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை பராமரிக்க 36 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவை
அடம்பனை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
தாதியர் தொழிற்சங்க போராட்டத்தால் மேலும் 3 குழந்தைகள் மரணம்
படையினரின் தாக்குதலைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு
திருமலை மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறும் சாத்தியம்
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலி
தேர்தலுக்கு பின்னரும் அனைவருக்கும் மதிப்பளியுங்கள் ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்
அடியார்களின் தேவைகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் அனுமதி
காவத்தையில் 250 பேர் சிக்குன்குன்யாவால் பாதிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்கு 28 ஆயிரம் பொலிஸார் விசேடமாக நியமிப்பு
நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்
சபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தத்தையடுத்து நகைச்சுவையான விடயங்களை கூறுகின்றார் ரணில்
அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை
கிழக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
அரசும் முப்படையினரும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு மோசடி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கிழக்கு வாக்காளரிடம் ஜே.வி.பி. வேண்டுகோள்
லெபனானிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கையர்களுக்கு தற்காலிகத் தடை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் இருநாள் விசாரணைகளின் பின்னர் விடுதலை
புத்தளம், மட்டக்குளியில் இரு தமிழர் கடத்தல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறையீடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையுடனேயே ரணில் செயற்படுகின்றார்
பஸ்ஸில் தமிழ் இளைஞர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளியில் ஒருவர் கைது
கொட்டகலைப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
சகல மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை ஐ.தே.க.உருவாக்கும்
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கான ஊடகவியலாளர் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
கல்முனை வலய மாணவர்கள் கல்வித்தரத்தில் சிறந்த பெறுபேறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன உரும்பிராய் இளைஞர்
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க எமக்கு வாக்களியுங்கள்
சர்வதேச வலைப்பின்னலினூடாக ஆங்கில பாட கற்கை நெறி ஆரம்பம்
கிழக்கில் யானையை கூலிக்கு விட்டுள்ளார் ஐ.தே.க.தலைவர்
மாகாண சபை தேர்தல் முடிவுகளே கிழக்கின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மக்கள் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை வங்கி முடிவு
`மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு திறமையே மூலதனமென எண்ணிச் செயற்பட வேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com