Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, May 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
[10 - May - 2008] [Font Size - A - A - A]
* நம்பிக்கையில் இலங்கை

பாசுமதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதில்லையென்ற தீர்மானத்தை இந்தியா தளர்த்துமெனவும் உணவுநெருக்கடியிலிருந்து இலங்கையை அந்த நாடு காப்பாற்றுமெனவும் இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரிசிக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுமானால் இந்தியா நிச்சயமாக உதவியளிக்கும்.

தனது களஞ்சியங்களில் 2.5 மில்லியன் தொன் அரிசியை இந்தியா தற்போது வைத்துள்ளது. இதனால் இந்த விடயத்தில் இலங்கைக்கு உதவுவதென்பது அவர்களுக்குப் பிரச்சினையாகத் தோன்றாது என்று வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.டி. இரட்நாயக்க வியாழனன்று தெரிவித்துள்ளார்.

மியான்மாரிலிருந்து 1 இலட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை உடன்படிக்கை செய்திருந்தது. ஆனால் அந்நாட்டில் சூறாவளி அனர்த்தம் ஏற்பட்டதால் தற்போது பெரும் நெருக்கடி நிலை அங்கு தோன்றியுள்ளது.

மியான்மாரில் 17 ஆயிரம் தொன் அரிசி 3 கப்பல்களில் ஏற்றப்பட்டதாகவும் ஆனால் குறித்த துறைமுகம் சூறாவளி அனர்த்தத்தினைத் தொடர்ந்து மூடப்பட்டதால் கப்பல்கள் இலங்கைக்கு வரமுடியவில்லையெனவும் இரட்நாயக்க கூறியுள்ளார். சூறாவளியால் 23 சிறிய கப்பல்கள் துறைமுகப் பகுதியில் மூழ்கிவிட்டன. அதனால் துறைமுகத்திலிருந்து கடலுக்கான பயணப்பாதைக்கு தடை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மியான்மார் அதிகாரிகளுடன் நாம் தொடர்புகொண்டு வருகிறோம் என்றும் இரட்நாயக்க கூறியுள்ளார்.

பாசுமதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதில்லையென இந்தியா தீர்மானித்தபோதும் இலங்கை அதிகாரிகளின் இந்த விடயம் தொடர்பாக பிரயோசனமான வகையில் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகங்களில் தெரிவிக்கப்படுமாற்போன்று தற்போது இலங்கையில் அரிசி நெருக்கடி இல்லை. உண்மையிலேயே தேவையேற்பட்டால் இந்தியா உதவும். அடுத்த இரு மாதங்களுக்குள் தமது கொள்கையை மீள்பரிசீலனை செய்வதாக இந்தியா எமக்குக் கூறியுள்ளது என்றும் இரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

தாய்லாந்திடமிருந்து இலங்கை அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான செய்திகள் குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை.

தாய்லாந்திடமிருந்து எவரும் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அதிக விலைக்கே விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் எவர் கொள்வனவு செய்வார்கள்? பல்வேறு தேர்வுகள் குறித்து எமது மக்கள் பேசுவார்கள். ஆனால் தாய்லாந்திலிருந்து அரிசி இறக்குமதி குறித்து எந்தத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளவில்லையென இரட்நாயக்க தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
இலங்கை இனமோதலுக்கு போர் மூலம் தீர்வு இல்லை
நேர காலத்துடன் வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள்
தேர்தல் கண்காணிப்பு குழுவில் அரசதரப்பினரின் பிரசன்னத்துக்கு ஹக்கீம் கடும் ஆட்சேபனை
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கிழக்கில் வாக்களிப்பு
பிரிட்டன் அரசால் கருணா விடுதலை சர்வதேச மன்னிப்பு சபை ஏமாற்றம்
சமூக சேவையாளர் சுட்டுக் கொலை
கறுக்காய்குளத்தில் நீண்டநேரம் கடும் மோதல் அதிக இழப்புகள்; பரஸ்பரம் இருதரப்பும் தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களை பராமரிக்க 36 மில்லியன் டொலர் அவசர நிதி உதவி தேவை
அடம்பனை கைப்பற்றியதாக படையினர் தெரிவிப்பு
தாதியர் தொழிற்சங்க போராட்டத்தால் மேலும் 3 குழந்தைகள் மரணம்
படையினரின் தாக்குதலைக் கண்டித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பகிஷ்கரிப்பு
திருமலை மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெறும் சாத்தியம்
கிண்ணியாவில் 36 நிலையங்களில் வாக்களிப்பு 36,077 பேர் வாக்களிப்பதற்கு தகுதி
எரிபொருள் நிலையத்தில் கொள்ளையடித்த முன்னாள் படைவீரர் பொலிஸாரின் சூட்டுக்கு பலி
தேர்தலுக்கு பின்னரும் அனைவருக்கும் மதிப்பளியுங்கள் ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மூன்று பிள்ளைகளின் தந்தை புத்தளத்தில் கடத்தல்
அடியார்களின் தேவைகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படையினர் அனுமதி
காவத்தையில் 250 பேர் சிக்குன்குன்யாவால் பாதிப்பு பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடமைக்கு 28 ஆயிரம் பொலிஸார் விசேடமாக நியமிப்பு
நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
ஆடம்பரக் காரில் வந்து பெண்களிடம் சங்கிலி அறுக்கும் கொள்ளையர்கள்
சபைக் கூட்டத் தொடர் இடை நிறுத்தத்தையடுத்து நகைச்சுவையான விடயங்களை கூறுகின்றார் ரணில்
அம்பாறை குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
மூதூர் படுகொலை விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இராஜதந்திரிகள் சந்திப்பு
அகதிகளென்ற போர்வையில் போராளிகள் நுழைவதைத் தடுக்க உரிய நடவடிக்கை
கிழக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்துவது தேர்தல் ஆணையாளரின் பொறுப்பு
முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சமீபமாக வாயு வெளியேற்றத்தையடுத்து எண்ணெய் வேட்டை
நேர்முகப் பரீட்சைக்காக வந்திருந்த இளைஞர் சந்தேகத்தின் பேரில் கைது
அரிசி நெருக்கடி தற்போது இல்லை பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா உதவும்
ஆளும்கட்சிக்கு கிடைக்கும் வெற்றி தமிழீழக் கனவைத் தகர்த்தெறியும்
அரசும் முப்படையினரும் நீதியான தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்
வாக்கு மோசடி இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கிழக்கு வாக்காளரிடம் ஜே.வி.பி. வேண்டுகோள்
லெபனானிற்கு பணிபுரியச் செல்லும் இலங்கையர்களுக்கு தற்காலிகத் தடை
வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் இருநாள் விசாரணைகளின் பின்னர் விடுதலை
புத்தளம், மட்டக்குளியில் இரு தமிழர் கடத்தல் மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறையீடு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசை காப்பாற்றும் முதலாளித்துவ சிந்தனையுடனேயே ரணில் செயற்படுகின்றார்
பஸ்ஸில் தமிழ் இளைஞர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்குளியில் ஒருவர் கைது
கொட்டகலைப் பகுதியில் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் சுற்றிவளைப்பு
சகல மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சூழலை ஐ.தே.க.உருவாக்கும்
தேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கான ஊடகவியலாளர் உரிமையை உறுதிப்படுத்துங்கள்
கல்முனை வலய மாணவர்கள் கல்வித்தரத்தில் சிறந்த பெறுபேறு
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது
பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன உரும்பிராய் இளைஞர்
வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிங்களவர் அனுபவிக்கும் உரிமையை தமிழர் அனுபவிக்க விரும்புவது தவறா?
மாகாணசபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் கிழக்கில் முஸ்லிம் மாகாணம் உருவாவதை தடுக்க முடியாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்க எமக்கு வாக்களியுங்கள்
சர்வதேச வலைப்பின்னலினூடாக ஆங்கில பாட கற்கை நெறி ஆரம்பம்
கிழக்கில் யானையை கூலிக்கு விட்டுள்ளார் ஐ.தே.க.தலைவர்
மாகாண சபை தேர்தல் முடிவுகளே கிழக்கின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மக்கள் மேம்பாட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 300 கிராமங்களை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை வங்கி முடிவு
`மாணவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு திறமையே மூலதனமென எண்ணிச் செயற்பட வேண்டும்'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com